• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஹலோ மிஸ் இம்சையே ஆனந்தத் தொல்லையே - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
3,139
Reaction score
9,909
1709017710105.png

தமயந்தி அழைத்தவுடனேயே, எந்த விதத் தயக்கமும் இல்லாமல் தனது தங்கை அவளுடன் கைக் கோர்த்துக் கொண்டு செல்வதைப் பார்த்த கார்த்திக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது.. எப்பொழுதாவது பிசினஸ் விஷயமாக தந்தையுடன் பேசப் போனாலும், தன்னைப் பார்த்து பயந்து ஒதுங்கி நிற்கும் அவளா இது என்ற ஆச்சரியம் மனதினில் எழவே செய்தது..

தனது அன்னையிடம் அவளை அழைத்துச் சென்ற தமயந்தி, “அம்மா என்னோட புது ஃப்ரெண்ட் கீர்த்திகா..” சிறுமியை அறிமுகப்படுத்த, மீனா அவளைக் கேள்வியாகப் பார்த்தார்.

“தெரிஞ்சவங்களோட தங்கைம்மா.. அவங்க அப்பாவை இங்க அட்மிட் பண்ணிருக்காங்க.. இவ காலையில இருந்து எதுவுமே சாப்பிடல போல.. தண்ணியைத் தண்ணியைக் குடிச்சிட்டு இருந்தா..” அவள் சொல்லி முடிப்பதற்கு முன்பே, சிறுமியின் கன்னத்தை வருடிய கல்யாணி பாட்டி,

“குழந்தை நல்ல பசியில இருக்கறா போல இருக்கு.. கூட்டிட்டு போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்க..” எனவும், தனது பாட்டியை கனிவுடன் பார்த்தவள்,

“உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.. நான் வாங்கிட்டு வரேன்..” எனவும்,

“இப்போ எதுவும் வேண்டாம் தங்கம்.. பெரிய தங்கத்தைப் பார்த்துட்டு அப்பறம் சாப்பிடறோம்.. நீ வேணா போயிட்டு வா மீனா..” என்று தனது மருமகளை அவர் சொல்லவும்,

“இல்லை அத்தை.. நானும் அவளைப் பார்த்துட்டு சாப்பிடறேன்..” அவரும் சொல்லிவிடவும், இருவரையும் பார்த்தவள்,

“எனக்கு பசிக்குதுப்பா.. நாங்க போய் சாப்பிட்டு வரோம்..” என்று அவள் கிளம்பும் நேரம், கையில் கவருடன் விஜய் வந்து சேர்ந்தான்.

“இந்தாங்க பாட்டி.. அத்தை.. இட்லி வாங்கிட்டு வந்தேன்.. இதுல ஸ்பூன் இருக்கு.. அப்படியே மூணு பேரும் சாப்பிட்டு முடிச்சிருங்க..” என்றவனின் பார்வை தமயந்தியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த சிறுமியின் மீது படிந்து, தமயந்தியின் மீது கேள்வியாக விழுந்தது..

“இது.. கார்த்திக்கோட சிஸ்டர் மாமா.. நானும் அவளும் சாப்பிட தான் போயிட்டு இருந்தோம்..” அவள் சொல்லவும், விஜயின் பார்வை சிறிது தூரத்தில் அமர்ந்திருந்த கார்த்திக்கின் மீது பாய்ந்தது..

“இன்னும் அவங்க அப்பா கண்ணு முழிக்கல.. ஒருவேளை அவங்க நகர்ந்த நேரத்துல கூப்பிட்டா என்ன செய்யறதுன்னு அவரு வரல..” எனவும், அவளைப் பற்றித் தெரிந்திருந்த விஜய்,

“சரி.. ரெண்டு பேரும் நல்லா டைம் என்ஜாய் பண்ணிக்கிட்டே சாப்பிட்டு வாங்க.. நாங்க ரூம்ல இருக்கோம்..” என்றவன், மீனா, கல்யாணி இருவரையும் அழைத்துக் கொண்டு தாமரைக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் செல்ல, தமயந்தி கீர்த்திகாவுடன் மருத்துவமனையின் எதிரில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றாள்.
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
3,139
Reaction score
9,909
“அக்கா.. அவங்க உங்க அம்மாவும் பாட்டியுமா? ரெண்டு பேருமே ஸ்வீட்டா இருக்காங்க..” சிறுமி சொல்லவும்,

“உன்னைப் பார்த்தா உங்க அம்மாவும் ஸ்வீட்டா இருப்பாங்க போல இருக்கே? உங்க அம்மா வரலையா?” யதார்த்தமாக அவள் கேட்கவுமே, மறுப்பாக தலையசைத்தவள்,

“எங்க அம்மா சாமிக்கிட்ட போயிட்டாங்க.. அண்ணாவோட அம்மாவும் சாமிக்கிட்ட போயிட்டாங்கன்னு அப்பா சொன்னாங்க. காலையில அப்பா அப்படி விழவும் ரொம்ப பயந்துட்டேன்..” இன்னமும் படபடப்பு குறையாமல் அவள் சொல்லவும், அவளது கையை தனது ஒரு கையால் பிடித்துக் கொண்டவள்,

“அது தான் நீயும் அண்ணாவும் கொண்டு வந்துட்டீங்களே.. இனிமே அப்பாவுக்கு சரியாகிரும்..” என்று சமாதானப்படுத்த,

“ஹையோ அக்கா.. அப்போ அண்ணா இந்த வீட்ல இல்ல. அவரோட வீட்ல இருந்தாங்கக்கா.. அப்பா விழவும் நான் சத்தம் போட்டு சமையல் ரூம்ல இருந்த செல்விம்மா தான் ஓடி வந்தாங்க. வெளிய வாக்கிங் போயிட்டு இருந்த பக்கத்து வீட்டு அங்கிள் தான் உடனே அப்பாவை இங்க கூட்டிட்டு வந்தார். செல்விம்மா தான் அண்ணாவுக்கு கால் செய்து சொல்லி இருப்பாங்க.. உடனே அண்ணா இங்க வந்துட்டாங்க.” அவள் கதை சொல்லவும், அவளது கையை இறுக பிடித்துக் கொண்ட தமயந்தி,

“சரி.. ஆருது பாரு.. சீக்கிரம் சாப்பிடு.. அங்க அப்பா முழிச்ச உடனே கீர்த்து குட்டி எங்கன்னு தேடுவாங்க இல்ல..” எனவும், சின்னவள் வேகவேகமாக உண்ணத் துவங்கினாள்..

அவளைப் பார்த்து புன்னகைத்தவள், அவள் உண்டு முடிக்கவும், ஒரு கவரை வாங்கிக் கொண்டு, “இந்தா இதை அண்ணாவைச் சாப்பிடச் சொல்லித் தா என்ன?” என்று சொல்லி ஒரு கவரைத் தர, சந்தோஷமாக வாங்கிக் கொண்டவளிடம், இரண்டு சாக்லேட் பார்களை நீட்டி,

“வா.. ரெண்டுபேருமே சாப்பிட்டுக்கிட்டே போவோம்..” என்றபடி ஒரு சாக்லேட்டைப் பிரித்து சுவைத்தபடி அவளுடன் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தாள்..

கார்த்திக்கைப் பார்த்ததும் சிறுமி நேராக அவனிடம் சென்று, “இந்தாண்ணா நீங்களும் காலையில காபி தானே குடிச்சீங்க.. இதைச் சாப்பிடுங்க..” என்றபடி தனது கையில் இருந்த கவரை நீட்டவும், அருகில் நின்று சாக்லேட்டை சுவைத்துக் கொண்டிருந்த தமயந்தியைப் பார்த்தான்..

அதைப் போலவே அவளது அருகில் நின்று சாக்லேட்டை சுவைத்தபடி அவனிடம் கவரை நீட்டிக் கொண்டிருந்த தனது தங்கையைப் பார்த்தவனுக்கு மெல்லிய புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.

“சாப்பாடு வாங்கிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ்.. எவ்வளவு ஆச்சுன்னு சொன்னா நான் உனக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யறேன்..” சொல்லிக் கொண்டே அவன் தனது மொபைலை எடுக்கவும், உதட்டைப் பிதுக்கி,

“பத்தாயிரம் ருபாய்..” என்ற அவளது பதிலைக் கேட்டவன் அதிர்ச்சியுடன் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

“ஹான்.. என்னது?” தனது காதில் சரியாகத் தான் விழுந்ததா என்று தெரிந்துக் கொள்ள, அவன் மீண்டும் கேட்கவும்,

“என்ன சார்? எவ்வளவு சொல்லு ட்ரான்ஸ்ஃபர் செய்யறேன்னு வேகமா போனை எடுத்தீங்க? இப்போ ஷாக் அடிச்சா போல பார்க்கறீங்க?” நக்கலாக அவள் கேட்கவும், கார்த்திக் வாயடைத்து நின்றான்.

“நீங்க பணம் தருவீங்கன்னு எதிர்ப்பார்த்து நான் அவளை கூட்டிட்டு போகல. உங்களுக்கு அப்படி கஷ்டமா இருந்தா.. நீங்க வாங்கித் தந்த ஃப்ரெஞ்ச்சு ப்ரைஸ்க்கு பதிலா நான் இதை வாங்கித் தந்தேன்னு நினைச்சிக்கோங்க.. முதல்ல சாப்பிடுங்க.. அப்போ தான் அப்பா எழுந்தா பார்க்க முடியும்.. இல்ல பக்கத்துல நீங்களும் படுத்துக்க வேண்டியது தான்..” என்றவள், கீர்த்திகாவின் அருகில் குனிந்து,

“கீர்த்து.. இதோ நான் அந்த படி ஏறின உடனே இருக்கற முதல் ரூம்ல தான் இருப்பேன்.. அப்பாவைப் பார்த்துட்டு உனக்கு போர் அடிச்சா நீ அங்க வா.. நானும் அதுக்குள்ள வீட்டுக்கு போயிட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்..” என்று சொல்லவும், கீர்த்திக்கா மகிழ்ச்சியுடன் தலையசைத்தாள்.

“ஆமாக்கா.. நீங்க ஏன் இங்க இருக்கீங்க? யாருக்கு என்னாச்சு?” சின்னவளின் கேள்விக்கு, அவளது கன்னத்தை வருடியவள்,

“எங்க அக்காவுக்கு குட்டிப் பாப்பா பிறந்திருக்கான். அதுக்கு தான் நாங்க வந்தோம்.. அப்பறமா வா.. குட்டிப் பாப்பா பார்க்கலாம்.. ரொம்ப குட்டியா அழகா இருக்கான்.. உன்னை மாதிரியே..” அவள் சொல்லவும், சிறியவளின் முகம் மலர்ந்தது.
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
3,139
Reaction score
9,909
“நீங்க வந்துட்டு என்னை கூப்பிடுங்க.. நான் வந்து பாப்பாவைப் பார்க்கறேன்.. எனக்கும் ஆசையா இருக்கு..” சிறியவள் சொல்லவுமே, தலையசைத்த தமயந்தி,

“சரி.. அங்க என்னோட பியூட்டி பாட்டி என்னைக் காணுமேன்னு தேட மாட்டாங்க.. இருந்தாலும் நான் பொறுப்பா இருக்கணும்ல.. போய் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டு அப்படியே வீட்டுக்கு போயிட்டு வரேன்.. பை..” என்றவளின் பார்வை கார்த்திக்கிடம் பதிந்து, ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள்..

துள்ளல் நடையுடன் போகும் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கையை மெல்லத் தொட்ட கீர்த்திகாவின் முகத்தைப் பார்த்தான்.

அவனது முகத்தை தயக்கமாக பார்த்தவள், “அந்த அக்கா உங்க ஃப்ரெண்டா? அவங்க நம்பர் எனக்கு போன்ல போட்டுத் தரீங்களா? நான் எனக்கு எப்போவாச்சு போர் அடிச்சா பேசறேன்..” தயங்கியபடி கேட்கவும், கார்த்திக் உதட்டைப் பிதுக்கினான்.

“என்னாச்சுண்ணா?” புரியாமல் கேட்க,

“என்கிட்டே அவங்க நம்பரும் இல்ல.. அவங்க என் ஃப்ரெண்டும் இல்ல.. சும்மா தெரிஞ்சவங்க..” அவனது பதிலில்,

“ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் எல்லாம் வாங்கித் தந்திருக்கீங்க? அப்போ ஃப்ரெண்ட் இல்லைன்னு சொல்றீங்க?” சிறுமியின் கேள்வியில் வாயடைத்துப் போனவன், என்ன பதில் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்த நிமிடம், அவர்களை அழைத்தபடி நர்ஸ் ஒருவர் வந்து நின்றார்..

“என்னாச்சு மேடம். அப்பா எப்படி இருக்காங்க?” படபடப்பாக அவன் கேட்க,

“அவரு கண்ணு முழிச்சிட்டாரு.. உங்களைப் பார்க்கணும்னு சொல்றாரு..” நர்ஸ் சொல்லவுமே, கீர்த்திகா அவனை ஆவலாகப் பார்க்க,

“வா.. அப்பாவைப் போய் பார்க்கலாம்.. உள்ள போய் சத்தம் போடக் கூடாது என்ன?” என்றபடி, கீர்த்திகாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான்.

“நான் சமத்தா இருக்கேண்ணா..” என்றபடி அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டு நடந்தவளைப் பார்த்தவனுக்கு, ஒரு குஞ்சுப் பறவை அரவணைப்பிற்காக ஏங்குவது போல இருந்தது. தனது அன்னை இறந்த பொழுது தானும் அந்த நிலையில் தானே இருந்தோம்.. இந்தச் சிறிய வயதில் இப்படி அவள் தனியே தவித்துக் கொண்டிருப்பதை நினைத்து மனதினில் வருத்தமே மிஞ்சியது..

அவளது கையை இறுகப் பிடித்துக் கொண்டவன், தனது தந்தையைக் காண ஐசியூவின் உள்ளே சென்றான்.

உள்ளே இருந்த அமைதியான சூழ்நிலை சிறியவளுக்கு பயமாக இருந்ததோ? அவனது கையை இரண்டு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, அவளது முகத்தைப் பார்த்தவன், மேலும் அவளது கையை இறுக பிடித்தபடி, மிகுந்த சிரமத்துடன் கண்களைத் திறந்துப் பார்த்துக் கொண்டிருந்த தந்தை விஜயேந்திரனின் அருகில் சென்றான்..

அவனைப் பார்த்ததும் சிரமத்துடன் புன்னகைத்தவர், தனது ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த கையை அவனை நோக்கி நீட்டினார்.. வேகமாக அருகில் சென்று அவரது கையைப் பிடித்துக் கொண்டவனிடம், “என்ன பயந்துட்டீங்களா?” என்று கேட்டு, அருகில் இருந்த கீர்த்திகாவின் கன்னத்தை வருட,

“ஆமாப்பா.. ரொம்ப பயந்துட்டேன்.. ஏன்ப்பா உங்களுக்கு அப்படி ஆச்சு?” என்றவள், கண்ணீருடன் அவரது மார்பினில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அவளது தலையை வருடியவர், கார்த்திக்கைப் பார்க்க, “கீர்த்தி.. அப்பா பக்கத்துல உட்கார்ந்துக்கோ.. அங்க அப்பாவுக்கு ஒட்டி இருக்காங்கல்ல.. அது நகர்ந்தா அப்பறம் டாக்டர் பார்க்கறது கஷ்டம் ஆகிரும்ல?” இதமாக அவன் சொல்லவும், ஆச்சரியமாக அவனைப் பார்த்தவரின் மனதினில் ஒரு சிறு நிறைவு..
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
3,139
Reaction score
9,909
“கார்த்தி.. எனக்கு ஏதாவதுன்னா லட்டுவை பத்திரமா பார்த்துக்கறியா? அவ பாவம்..” திணறியபடி அவர் கேட்க,

“என்ன இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க? நீங்க முதல்ல உடம்பைப் பார்த்துக்கிட்டு வாங்க..” படபடப்பாக கார்த்திக் சொல்லவும், கீர்த்திகா இருவரின் முகத்தையும் பார்த்தாள்.

அவளைத் தனது அருகே இழுத்துக் கொண்டவன், “என்ன இருந்தாலும் அவ என் தங்கைப்பா.. நீங்க அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க..” என்ற அவனது மனதினில் ஒரு சில வினாடிகள் தமயந்தியின் முகம் வந்து போனது.. தலையை குலுக்கிக் கொண்டவன், ‘இப்போ எதுக்கு நான் அவளை நினைக்கிறேன்?’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவனது கவனம் அருகில் கேட்ட கீர்த்திகாவின் குரலில் பதிந்தது.

“சாப்பிட்டேன்பா.. அண்ணாவோட ஃப்ரெண்ட் அக்கா கூட போய் சாப்பிட்டு வந்தேன்.. அந்த அக்கா ரொம்ப நல்ல அக்கா..” அவள் சொல்லவுமே, தந்தையின் பார்வை ஆவலுடன் கார்த்திக்கின் மீது பதிந்தது..

“சரி.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம்.. நான் கீர்த்தியை செல்விம்மா கிட்ட விட்டுட்டு வரேன்.. அவ இங்க ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டாம்.. நீங்க தூங்குங்க நான் ஒரு அரைமணி நேரத்துல வந்துடறேன்..” என்றவன், அவரது கையை இதமாக பிடித்துவிட்டு, கீர்த்தியுடன் வெளியில் வர,

“அண்ணா.. நான் இங்கேயே இருக்கேனே..” மெல்லிய குரலில் கேட்டவளது கன்னத்தை வருடியவன்,

“இல்லம்மா.. நீ செல்வி கூட வீட்ல இரு.. குளிச்சிட்டு ரெஸ்ட் எடு.. நான் சாயந்திரம் உன்னை வந்து அப்பாவை பார்க்க மறுபடியும் கூட்டிட்டு வரேன் என்ன? நாளைக்கு ஸ்கூல்க்கு போக வேண்டாமா? இங்கயே உட்கார்ந்து இருக்க முடியாது தானே.. நான் அப்பா இங்க இருக்கற வரைக்கும் உன்னை அப்பாவை பார்க்க வந்து கூட்டிட்டு வரேன் என்ன?” என்று மெல்ல சமாதானம் செய்தவன், அங்கிருந்த நர்சிடம் சொல்லிவிட்டு, கீர்த்திகாவுடன் வீட்டிற்கு புறப்பட்டான்.

அவளை வீட்டில் விட்டவன், “செல்விம்மா நான் சாயந்திரம் வந்து அவளை ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போறேன்.. அதுவரை அவளை பத்திரமா பார்த்துக்கோங்க..” வீட்டில் வேலை செய்பவரிடம் சொல்லிவிட்டு,

“கீர்த்தி நீ அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம சமத்தா இருக்கணும்.. நான் சாயந்திரம் வந்து அப்பாவை பார்க்க கூட்டிட்டு போறேன் என்ன?” என,

“அந்த அக்கா வந்தா என்னை தேடுவாங்களே.. பாப்பா காட்டறேன்னு சொன்னாங்க.. நான் வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்ல அவங்க போன் நம்பர் கூட இல்ல..” கவலையாக அவள் சொல்ல, கார்த்திக்கின் இதழ்களில் புன்னகை விரிந்தது..

அவளது கன்னத்தைத் தட்டியவன், “உன்னை அந்த அக்கா தேடிட்டு வந்தாங்கன்னா நான் போன் நம்பரை வாங்கி வச்சிட்டு, நீ வீட்டுக்கு போயிருக்கற விஷயத்தைச் சொல்லிடறேன்.. ஓகே வா..” என்றவன்,

‘விட்டா அவளுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிருவா போல இருக்கு.. பார்த்து கொஞ்ச நேரம் தான் ஆகுது.. அக்கா.. அக்கான்னு அவ புராணத்தைப் பாடறதைப் பாரு..’ என்று புலம்பியபடி, தனது வீட்டிற்குச் சென்று, தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, மருத்துவனைக்கு புறப்பட்டான்.

மருத்துவனைக்குள் அவன் நுழைந்தபொழுதே யாரிடமோ அன்று செய்ய வேண்டியவைகளை போனில் சொல்லியபடியே உள்ளே நுழைய, கல்யாணியை அழைத்துக் கொண்டு தமயந்தி எதிர்பட்டாள்.

மிகவும் மும்முறமாக அவன் பேசிக் கொண்டே அவளைக் கடக்கும் வேளையில், “சப்பா அப்படியே போன்லயே கூகுல விலைப் பேசறது போல தான்.. பார்த்து.. சுந்தர் பிச்சை பயந்துட போறாரு..” கேலி செய்துக்கொண்டே கடந்து செல்ல, போன் பேசிக் கொண்டிருந்தவனின் காதுகளில் அது விழுந்தாலும், பேசிக் கொண்டிருந்த மும்முறத்தில் அவனது மூளையில் அது தாமதமாகப் பதிந்த பொழுது,

“ஹான்.. என்ன சொன்ன?” என்று திரும்பிப் பார்க்க, அவளோ பாட்டியிடம் ஏதோ வளவளத்தபடி காருக்கு அருகில் செல்வதைப் பார்த்தவனின் கவனம் சிதறியது..
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
3,139
Reaction score
9,909
அதற்குள் மறுபுறம் பேசிக் கொண்டிருந்தவர் பலமுறை ‘ஹலோ..’ சொல்லவும்,

‘இம்சை.. க்ராஸ் பண்ற நேரத்துல நம்மள டைவர்ட் பண்ணிட்டு போயிட்டாளே..’ மனதினில் புலம்பியவன், ‘சாரி..’ என்று மன்னிப்பு வேண்டி, மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தபடி முன்பு அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்றவன், போனை முடித்துவிட்டு, ஒருமுறை தனது தந்தையைப் பார்த்துவிட்டு, தனது வேலையைத் துவங்கினான்..

லாப்டாப்பில் அவன் மூழ்கிக் கிடக்க, கல்யாணி கொடுத்த உணவை எடுத்துக் கொண்டு, தனது லேப்டாப் பையுடன் வந்தவள் நேராக அறைக்குச் சென்றாள்..

குழந்தைத் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கவும், அதன் கையை வருடியவள், “நல்லவேளை குட்டி நம்ம தாமரை போல அழகா இருக்கான்.. நான் கூட மாமா போல மீசையோட பிறந்திருவானோன்னு பயந்து போயிட்டேன்..” தாமரையின் அருகே அமர்ந்து, அவளது தலையை வருடிக் கொண்டிருந்தவனை தமயந்தி வம்பு வளர்க்க, தாமரை விஜயைப் பார்த்து சிரித்தாள்.

“நான் கூட எங்க உன்னைப் போல வாய் பேசிட்டே பிறக்கப் போகுதுன்னு நினைச்சு பயந்து இருந்தேன்.. நல்லவேளை அப்படி இல்ல.. பாரு என்னைப் போல அமைதியா தூங்கிட்டு இருக்கான்..” பதிலுக்கு அவனும் கேலி செய்ய,

“சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. எனக்கு ட்ரீட் எங்க மாமா? எனக்கு ஹேசல்னட் ப்ரௌனி வேணும்.. கொஞ்சம் எக்ஸ்ட்ராவா வேணும். இங்க ஒரு குட்டி பொண்ணு இருக்கால்ல அவளுக்கும் சேர்த்து.. சரி.. இப்போ நீங்க சாப்பிடுங்க. அதுவரை நான் எங்க அக்காவுக்கு தலையை வருடி விடறேன்..” அவள் கேலி செய்யவும், அவளது கையில் அடித்த தாமரை,

“போடி அரட்டை.. உனக்கு பொறாமை. உன்னோட வீட்டுக்காரர் என்ன செய்யறார்ன்னு நான் பார்க்கத் தானே போறேன்..” மீனாவும் விஜயும் உண்ணத் துவங்கவும்,

“உனக்கு சாப்பிட என்ன தருவாங்க? உனக்கு நான் ஊட்டி விடவா? பாட்டி உனக்கு தனியா கொஞ்சம் பூண்டு நிறைய போட்டு ரசம் செய்து கொடுத்திருக்காங்க.. சாப்பிடறியா?” என்று கேட்க,

“இல்லடா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் ஜூஸ் குடிச்சேன்.. இப்போ பசிக்கல.. நீ சாப்பிட்டயா?” தாமரை கேட்கும் நேரம் சிறியவன் அழ,

“அச்சோ குட்டி கண்ணா அழறான்.. என்ன செய்யறது?” அவள் பதைபதைக்க, மீனா அவசரமாக கையைக் கழுவிக்கொண்டு வந்தார்.

“நீ வெளிய இரு..” எனவும், தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவள், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி அதை இயக்கிவிட்டு வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள்.

அவளது அருகில் வந்து அமர்ந்த விஜய், “நான் சாயந்திரம் கொஞ்ச நேரம் கடைக்கு போயிட்டு வருவேன் அப்போ உனக்கு ப்ரவுனி எடுத்துட்டு வரேன்..” என்றவன்,

“உனக்கு அந்தப் பொண்ணை எவ்வளவு நாளா தெரியும்?” மெல்ல பேச்சுக் கொடுக்க,

“காலையில தான் பார்த்தேன் மாமா.. அவங்க அப்பாவை அட்மிட் செய்திருக்காங்க போல. அழுதுட்டு இருந்தா..” இயல்பாக அவள் கதை சொல்லவும், அதைக் கேட்டுக் கொண்டவன், சட்டென்று மனதினில் தோன்றியதைக் கேட்டான்..

“ஆமா.. கார்த்திக்குக்கு எப்படி தாமரையை அட்மிட் செய்திருக்கறது தெரியும்? எப்படி எனக்கு வாழ்த்து சொல்லிட்டு போறார்?” சந்தேகமாக அவன் கேட்க, தனது தலையில் தட்டிக் கொண்டவள், தான் காரில் அமர்ந்து அழுத கதையைச் சொல்ல, விஜயின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

“அவ அழுதாளோ இல்லையோ நீ அழுத?” அவன் கேட்க, அசடு வழிய தலையசைத்தவள், கார்த்திக் வந்த கதையையும் சொல்லி முடித்தாள்.

“ஓ..” என்ற விஜயை நர்ஸ் ஒருவர் வந்து அழைக்கவும், அவன் எழுந்துச் செல்ல, தமயந்தி தனது ப்ராஜெக்ட்டில் மூழ்கினாள்..

சிறிது நேரத்தில், “உங்க லாப்டாப் சார்ஜ் ஆகிருச்சுன்னா நான் கொஞ்ச நேரம் சார்ஜ் போட்டுக்கலாமா?” என்ற குரல் கேட்க, அதில் நிமிர்ந்தவள், தனது லேப்டாப்புடன் நின்றுக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்து விழிகளை விரித்தாள்.

“என்ன உங்களுது சார்ஜ் இல்லையா?” அவன் மீண்டும் கேட்க,

“இல்ல.. இல்ல.. சார்ஜ் இருக்கு.. ஏதோ யோசனையில கோடிங் பார்த்துட்டு இருந்தேனா.. திடீர்னு வந்து கேட்கவும் எனக்கு எதுவுமே புரியல.. என்னதுல சார்ஜ் இருக்கு.. நீங்க போட்டுக்கோங்க..” அங்கு போடப்பட்டிருந்த காத்திருப்போர் இருக்கைகளின் அருகில் இருந்த சார்ஜ் போடும் இடத்திலிருந்த தனது சார்ஜரை கழட்டிவிட்டு,

“போட்டுக்கோங்க..” என்றுவிட்டு, தனது வேலையில் கவனமாக, ஆச்சரியமாக அவளைப் பார்த்தபடி, சார்ஜ் போட்டுக்கொண்டு, அவளது அருகில் அமர்ந்தான்..
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
3,139
Reaction score
9,909



ஹலோ தோழமைகளே.. இதோ கதையின் அடுத்தப் பகுதியைக் கொடுத்துவிட்டேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைத் தவறாமல் பதிவிடுங்கள்.. உங்களது கருத்துக்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.. சென்ற பதிவிற்கு கருத்து பதிவிட்ட உள்ளங்களுக்கு மிக்க நன்றி..

 




Advertisements

Latest Episodes

Advertisements

Top