ஹாய் தோழர் தோழிகளே இன்றோடு நான் இந்த தளத்தில் கால் பதித்து கை தானே பதிக்க முடியும். சரி கை பதித்து ஓராண்டு ஆகுது. இன்று எபி குடுக்கலன்னா எப்படி? அதான் வந்துட்டேன் ட்ரீடோட. படித்து ட்ரீட் எப்படி இருக்கிறது என்று சொல்லிட்டு போங்க. அப்படியே கடைசில இருக்குற அந்த லைக்க ஒரு கிளிக் ப்ளீஸ்
[பின் குறிப்பு: இனி வாரம் ஒருமுறை தான் எட்டிப் பார்க்க முடியும் தோழமைகளே. நாளை முடியுமா என்று தெரியவில்லை அதனால் மனிச்சு...]
அப்புறம் ஹீரோ ஹீரோயின் படம் கேட்டிங்க போடுறேன். படம் பார்த்து படிக்குறவங்க படிங்க. பிடிக்காதவங்க இதை அப்படியே விட்டுட்டு உங்க கற்பனையில் வரதை வைத்து படிங்க. ப்ரோப்ளம் சால்வ்
மழை - 11
போட்டோவை பதிவேற்றியதும் போன் ஆப் ஆகிவிட்டது. ‘வீட்டுக்கு போய் சார்ஜ் போடணும்’ என்று எண்ணிக்கொண்டு அரசனைப் பார்த்தாள்.
அவனோ சீட்டில் கண்மூடி சாய்ந்திருந்தான். மதி ஒன்றொன்றும் பார்த்துப் பார்த்து செய்ய இவனிற்கு காதல் வராமல் ‘தனக்கு ஒன்றும் தெரியவில்லையே எப்படி வாழ போறோம்?’ என்றுதான் மனம் அரற்றியது. யாருக்கும் தெரியாமல் மீண்டும் காட்டிற்கு சென்றுவிடுவோமா? என்ற நிலையில் இருந்தான். அவனிற்கு அங்கிருக்கும் காற்றைக் கூட சுவாசிக்க முடியவில்லை. நமக்கு எப்படி மலைப்பகுதிக்கு சென்றால் சுத்தமான காற்றுக்கு மனம் இதமாகுமோ அது போல் தானே அவனிற்கும் இந்தக் காற்றுச் சுவாசித்து மனம் பாதிக்கும்.
வேறு வேலை இல்லாததால் மதி அவனை தன் குறுகுறு விழிகளால் ஆராய அதாவது சைட் அடிக்க, அவனின் தலைமுடி தோள் தொடுவதைப் பார்த்து, “அச்சோ மறந்துட்டேனே...” என்று தலையில் அடித்தாள்.
அதில் அரசன் தன் சிந்தனை கலைந்து எழ, “இன்னும் ஒன்னே ஒன்னு பண்ணனும் மாமா. வீட்டுல எல்லாரும் நம்மளைப் பார்க்க தான் வருவாங்க. அங்க இப்படி போனா நல்லவா இருக்கும்?” என்று அவனின் முடியை தொட்டுக் காமித்தவள், “இது வரை வெட்டிக்கலாம் என்று பின்கழுத்தைத் தொட்டு அளவு சொன்னாள்.
அரசனும் கடையில் பெரும்பாலான ஆடவரை பார்த்திருந்தானே. தான் மட்டும் தனித்து தெரிய வேறு வழியின்றி சம்மதித்தான். நல்ல வேலை முடியை தோள் வரை வளர்த்து திரிபவர்கள் இவன் கண்ணில் படவில்லை.
முதலில் தாத்தாவின் செல்பேசியில் இருந்து தாயிடம் கூறி அனுமதி வாங்கினாள். பின் செல்லும் வழியில் உள்ள பிரபல பியுட்டி பார்லரின் அருகில் காரை நிறுத்தச் சொல்லி அவனின் கைபிடித்து இழுத்துச் செல்ல, அப்போது தான் அரசன் இன்று அவளின் நடவடிக்கை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான். இதுவரை அவள் துடிப்பானவள், உற்சாகமானவள் என்று நினைத்திருந்தாலும் இன்று அதனையும் மீறி இன்று நெருக்கம் அதிகமாக இருப்பதாக தோன்றவும் கையை உருவி தானே வருவதாக கூறி விலகினான்.
அவன் விலகியதும் மதி கேள்வியாக பார்க்க, அவன் சற்று சங்கடமாக வரவும்தான் தன் தொடுகை அவனை சங்கோஜப்படுத்தியதை உணர்ந்தாள். ‘சோ ஸ்வீட் மாமோய்’ என்று மனதினுள் எண்ணியவள் வெளியே ஒன்றையும் காட்டிக்கொள்ளாமல் அங்கிருப்பவரிடம் அரசனுக்கு செய்ய வேண்டியதைக் கூறி காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்தாள்.
அவனை கண்ணாடியைப் பார்த்து இருக்கும் இருக்கையில் அமரச் செய்து ஜாக்கெட்டை அணிவித்து குளிர்ந்த நீரை முடியில் ஸ்ப்ரே செய்து கரக் கரக் என்று வெட்டத் தொடங்கினார் முடி அலங்கரிப்பவர். அந்த சத்தத்தில் அரசனுக்குத் தூக்கம் சொக்கியது. அவன் கடினப்பட்டு கண்ணை மூடாமல் அமர்ந்திருக்க அவனையும் மீறி அவன் தூங்கும்முன் பாவம் பார்த்தோ இல்லை வேலை முடிந்ததாலோ சீப்பால் தலையைச் சீவி ஜாக்கெட்டை கழற்றி உதறினார்.
ஹப்பாடி என்று அரசன் நிமிரவில்லை அதற்குள் மீண்டும் அதைப் போர்த்தினார். அரசன் தன்னைப் பார்க்காமல் கண்ணாடி வழியாக பின்னால் அமர்ந்திருந்த மதியை பார்த்தான். அவள் அங்கிருக்கும் பேப்பரைப் பார்த்தாளே ஒழிய இவனுக்கும் பக்கமே திரும்பவில்லை.
அதற்குள் கையில் ட்ரிம் செய்ய தேவையான பொருட்களோடு அரசனின் முகத்தில் கை வைக்க அவர் செய்ய போவதை உணர்ந்து, “இல்லை வேணாம். இதுவே போதும்” என்று கூறி எழுந்துவிட்டான்.
“மேடம்” என்று அரசன் எழுந்ததும் அவர் மதியை அழைக்க, அவளுக்கு பார்த்ததும் புரிந்தது என்ன நடந்திருக்கும் என்று. இதற்கு மேல் பேச தெம்பில்லாமல் பார்வையால் கெஞ்சினாள் போய் உட்காரும்படி. அவன் கேட்காமல் ஜாக்கெட்டை கழட்ட முயற்சிக்க எழுந்து வந்தவள், “மாம்ம்மா... ப்ளீஸ் சீக்கிரம் போகணும் உங்க தாடிய ஒன்னும் பண்ண மாட்டங்க. ஜஸ்ட் அங்க இங்க ஸ்டைல் பண்ணி விட்ருவாங்க” என்று கூறியவாறே தோளைப் பிடித்து உட்கார வைத்து முடியும்வரை அருகிலேயே நின்றுக்கொண்டாள். ட்ரிம் செய்த தாடியில் தன்னைக் கண்டவனுக்கு ஒரு நொடி நம்பத்தான் முடியவில்லை.
அவனுக்கே ஆச்சரியமாக இருக்க தொட்டு பார்த்து அப்படியும் இப்படியும் திரும்பி பார்க்க மதி, “எல்லாம் நல்லா தான் இருக்கு” என்று கூறி பணம் செலுத்தி அங்கிருந்து கிளம்ப அவளைப் பின்பற்றினான் இவன்.
காரில் ஏறியதில் இருந்து அரசனின் புது தோற்றத்தில் மேலும் மேலும் மயங்கினாள் வான்மதி. “அச்சோ மாமா மயக்குறாரே” என்று வேறு முனகிக்கொண்டாள். முன்னர் அடங்கியிருந்த முடி இப்போது அடங்காமல் அலைபாய அதைப் பிடித்து அடங்க வைக்க முயற்சி செய்து முடியாமல் மதியை ‘என்னதிது?’ என்பது போல் பார்த்தான்.
அதில் வந்த சிரிப்பை அடக்கியவள், “இப்படி தள்ளுங்க” என்று அவன் கலைத்து முன்னால் போட்ட முடியை ஓரமாகத் தள்ளி சரி செய்தாள். காரில் நடப்பதை கண்டும் காணாமல் ஓட்டும் தாத்தாவிற்குக் கூட மதியின் மனது புரிந்தது. அரசனுக்குத் தான் புரியவில்லை. அவன் எங்கே இதை கவனிக்கும் மனநிலையில் இருந்தான்? இடமாற்றம் மொழிமாற்றம் செயல்மாற்றம் என அவனிற்குள் சிக்கித் தவிக்கையில் மதியின் மனமாற்றமா தெரியப் போகிறது?
ஆனால் இது எதனையும் அவன் யாருடனும் பகிர்ந்துக்கொள்ளவில்லை. அரண்மனைக்கு வந்ததும் அரசனின் இப்போதைய தேவைக்கு மட்டும் வேண்டிய உடையை எடுத்து ஒரு பையில் வைத்தாள். கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்து இறங்க தயங்கியவனை முதுகில் ஒற்றை கைவைத்து அவசர அவசரமாக வெளியில் இருக்கும் படிக்கட்டு வழியாக மாடி ஏறி பால்கனி வழியாக அறை இருக்குமிடம் வந்தாள்.
அரசனிற்கு அப்போதுதான் இப்படி ஒரு வழி இருப்பதே தெரிந்தது. எதிர் எதிர் அறையில் இருவரும் தங்கியிருந்தனர். மேலே ஆறு அறைகள் இருக்க மதிக்கு பக்கத்து அறையில் கீதா – அழகேசனும் அரசன் அவர்களின் எதிர்புறமும் மீதம் மூன்று அறைகள் பயன்படுத்தாமல் பூட்டி வைத்தும் இருந்தனர்.
“இந்தாங்க குளிச்சி இதை போட்டுட்டு வாங்க” என்றவள் சும்மா இல்லாமல், “மாமா குளிக்க தெரியுமா இல்லை நான் உதவி பண்ணவா?” என்று கண்ணடித்து கேட்டாள்.
அவள் கேள்வியில் அதிர்ந்து திரும்பியவன் பின் அவளின் குறும்பை உணர்ந்து “போடி...” என்று சிவந்த முகத்தை காட்டாமல் உள்ளே சென்று கதவடைத்தான்.
அவன் மறைத்தாலும் அது அவனையே பார்த்துக்கொண்டிருந்த மதியின் பார்வையில் விழுந்து விட, “மாமாக்கு வெட்கம் வந்துடிச்சி டோய்... என்ன நான் பண்ண வேண்டியதெல்லாம் மாமா பண்ணிட்டு போறாரு” என்று கூறி தலையில் செல்லமாக அடித்தவள் மறக்காமல் அவள் செல்லையும் அரசனின் செல்லையும் சார்ஜரில் போட்டுவிட்டு மனதில் தோன்றிய பாடலை வாய்விட்டு
பாடியபடி தயாராகத் தொடங்கினாள்.
கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா
ஒஹ் கொக்கரக்கோ சேவலா
கோழிக்கி நீ காவலா
நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
[பின் குறிப்பு: இனி வாரம் ஒருமுறை தான் எட்டிப் பார்க்க முடியும் தோழமைகளே. நாளை முடியுமா என்று தெரியவில்லை அதனால் மனிச்சு...]
அப்புறம் ஹீரோ ஹீரோயின் படம் கேட்டிங்க போடுறேன். படம் பார்த்து படிக்குறவங்க படிங்க. பிடிக்காதவங்க இதை அப்படியே விட்டுட்டு உங்க கற்பனையில் வரதை வைத்து படிங்க. ப்ரோப்ளம் சால்வ்
மழை - 11
போட்டோவை பதிவேற்றியதும் போன் ஆப் ஆகிவிட்டது. ‘வீட்டுக்கு போய் சார்ஜ் போடணும்’ என்று எண்ணிக்கொண்டு அரசனைப் பார்த்தாள்.
அவனோ சீட்டில் கண்மூடி சாய்ந்திருந்தான். மதி ஒன்றொன்றும் பார்த்துப் பார்த்து செய்ய இவனிற்கு காதல் வராமல் ‘தனக்கு ஒன்றும் தெரியவில்லையே எப்படி வாழ போறோம்?’ என்றுதான் மனம் அரற்றியது. யாருக்கும் தெரியாமல் மீண்டும் காட்டிற்கு சென்றுவிடுவோமா? என்ற நிலையில் இருந்தான். அவனிற்கு அங்கிருக்கும் காற்றைக் கூட சுவாசிக்க முடியவில்லை. நமக்கு எப்படி மலைப்பகுதிக்கு சென்றால் சுத்தமான காற்றுக்கு மனம் இதமாகுமோ அது போல் தானே அவனிற்கும் இந்தக் காற்றுச் சுவாசித்து மனம் பாதிக்கும்.
வேறு வேலை இல்லாததால் மதி அவனை தன் குறுகுறு விழிகளால் ஆராய அதாவது சைட் அடிக்க, அவனின் தலைமுடி தோள் தொடுவதைப் பார்த்து, “அச்சோ மறந்துட்டேனே...” என்று தலையில் அடித்தாள்.
அதில் அரசன் தன் சிந்தனை கலைந்து எழ, “இன்னும் ஒன்னே ஒன்னு பண்ணனும் மாமா. வீட்டுல எல்லாரும் நம்மளைப் பார்க்க தான் வருவாங்க. அங்க இப்படி போனா நல்லவா இருக்கும்?” என்று அவனின் முடியை தொட்டுக் காமித்தவள், “இது வரை வெட்டிக்கலாம் என்று பின்கழுத்தைத் தொட்டு அளவு சொன்னாள்.
அரசனும் கடையில் பெரும்பாலான ஆடவரை பார்த்திருந்தானே. தான் மட்டும் தனித்து தெரிய வேறு வழியின்றி சம்மதித்தான். நல்ல வேலை முடியை தோள் வரை வளர்த்து திரிபவர்கள் இவன் கண்ணில் படவில்லை.
முதலில் தாத்தாவின் செல்பேசியில் இருந்து தாயிடம் கூறி அனுமதி வாங்கினாள். பின் செல்லும் வழியில் உள்ள பிரபல பியுட்டி பார்லரின் அருகில் காரை நிறுத்தச் சொல்லி அவனின் கைபிடித்து இழுத்துச் செல்ல, அப்போது தான் அரசன் இன்று அவளின் நடவடிக்கை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான். இதுவரை அவள் துடிப்பானவள், உற்சாகமானவள் என்று நினைத்திருந்தாலும் இன்று அதனையும் மீறி இன்று நெருக்கம் அதிகமாக இருப்பதாக தோன்றவும் கையை உருவி தானே வருவதாக கூறி விலகினான்.
அவன் விலகியதும் மதி கேள்வியாக பார்க்க, அவன் சற்று சங்கடமாக வரவும்தான் தன் தொடுகை அவனை சங்கோஜப்படுத்தியதை உணர்ந்தாள். ‘சோ ஸ்வீட் மாமோய்’ என்று மனதினுள் எண்ணியவள் வெளியே ஒன்றையும் காட்டிக்கொள்ளாமல் அங்கிருப்பவரிடம் அரசனுக்கு செய்ய வேண்டியதைக் கூறி காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்தாள்.
அவனை கண்ணாடியைப் பார்த்து இருக்கும் இருக்கையில் அமரச் செய்து ஜாக்கெட்டை அணிவித்து குளிர்ந்த நீரை முடியில் ஸ்ப்ரே செய்து கரக் கரக் என்று வெட்டத் தொடங்கினார் முடி அலங்கரிப்பவர். அந்த சத்தத்தில் அரசனுக்குத் தூக்கம் சொக்கியது. அவன் கடினப்பட்டு கண்ணை மூடாமல் அமர்ந்திருக்க அவனையும் மீறி அவன் தூங்கும்முன் பாவம் பார்த்தோ இல்லை வேலை முடிந்ததாலோ சீப்பால் தலையைச் சீவி ஜாக்கெட்டை கழற்றி உதறினார்.
ஹப்பாடி என்று அரசன் நிமிரவில்லை அதற்குள் மீண்டும் அதைப் போர்த்தினார். அரசன் தன்னைப் பார்க்காமல் கண்ணாடி வழியாக பின்னால் அமர்ந்திருந்த மதியை பார்த்தான். அவள் அங்கிருக்கும் பேப்பரைப் பார்த்தாளே ஒழிய இவனுக்கும் பக்கமே திரும்பவில்லை.
அதற்குள் கையில் ட்ரிம் செய்ய தேவையான பொருட்களோடு அரசனின் முகத்தில் கை வைக்க அவர் செய்ய போவதை உணர்ந்து, “இல்லை வேணாம். இதுவே போதும்” என்று கூறி எழுந்துவிட்டான்.
“மேடம்” என்று அரசன் எழுந்ததும் அவர் மதியை அழைக்க, அவளுக்கு பார்த்ததும் புரிந்தது என்ன நடந்திருக்கும் என்று. இதற்கு மேல் பேச தெம்பில்லாமல் பார்வையால் கெஞ்சினாள் போய் உட்காரும்படி. அவன் கேட்காமல் ஜாக்கெட்டை கழட்ட முயற்சிக்க எழுந்து வந்தவள், “மாம்ம்மா... ப்ளீஸ் சீக்கிரம் போகணும் உங்க தாடிய ஒன்னும் பண்ண மாட்டங்க. ஜஸ்ட் அங்க இங்க ஸ்டைல் பண்ணி விட்ருவாங்க” என்று கூறியவாறே தோளைப் பிடித்து உட்கார வைத்து முடியும்வரை அருகிலேயே நின்றுக்கொண்டாள். ட்ரிம் செய்த தாடியில் தன்னைக் கண்டவனுக்கு ஒரு நொடி நம்பத்தான் முடியவில்லை.
அவனுக்கே ஆச்சரியமாக இருக்க தொட்டு பார்த்து அப்படியும் இப்படியும் திரும்பி பார்க்க மதி, “எல்லாம் நல்லா தான் இருக்கு” என்று கூறி பணம் செலுத்தி அங்கிருந்து கிளம்ப அவளைப் பின்பற்றினான் இவன்.
காரில் ஏறியதில் இருந்து அரசனின் புது தோற்றத்தில் மேலும் மேலும் மயங்கினாள் வான்மதி. “அச்சோ மாமா மயக்குறாரே” என்று வேறு முனகிக்கொண்டாள். முன்னர் அடங்கியிருந்த முடி இப்போது அடங்காமல் அலைபாய அதைப் பிடித்து அடங்க வைக்க முயற்சி செய்து முடியாமல் மதியை ‘என்னதிது?’ என்பது போல் பார்த்தான்.
அதில் வந்த சிரிப்பை அடக்கியவள், “இப்படி தள்ளுங்க” என்று அவன் கலைத்து முன்னால் போட்ட முடியை ஓரமாகத் தள்ளி சரி செய்தாள். காரில் நடப்பதை கண்டும் காணாமல் ஓட்டும் தாத்தாவிற்குக் கூட மதியின் மனது புரிந்தது. அரசனுக்குத் தான் புரியவில்லை. அவன் எங்கே இதை கவனிக்கும் மனநிலையில் இருந்தான்? இடமாற்றம் மொழிமாற்றம் செயல்மாற்றம் என அவனிற்குள் சிக்கித் தவிக்கையில் மதியின் மனமாற்றமா தெரியப் போகிறது?
ஆனால் இது எதனையும் அவன் யாருடனும் பகிர்ந்துக்கொள்ளவில்லை. அரண்மனைக்கு வந்ததும் அரசனின் இப்போதைய தேவைக்கு மட்டும் வேண்டிய உடையை எடுத்து ஒரு பையில் வைத்தாள். கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்து இறங்க தயங்கியவனை முதுகில் ஒற்றை கைவைத்து அவசர அவசரமாக வெளியில் இருக்கும் படிக்கட்டு வழியாக மாடி ஏறி பால்கனி வழியாக அறை இருக்குமிடம் வந்தாள்.
அரசனிற்கு அப்போதுதான் இப்படி ஒரு வழி இருப்பதே தெரிந்தது. எதிர் எதிர் அறையில் இருவரும் தங்கியிருந்தனர். மேலே ஆறு அறைகள் இருக்க மதிக்கு பக்கத்து அறையில் கீதா – அழகேசனும் அரசன் அவர்களின் எதிர்புறமும் மீதம் மூன்று அறைகள் பயன்படுத்தாமல் பூட்டி வைத்தும் இருந்தனர்.
“இந்தாங்க குளிச்சி இதை போட்டுட்டு வாங்க” என்றவள் சும்மா இல்லாமல், “மாமா குளிக்க தெரியுமா இல்லை நான் உதவி பண்ணவா?” என்று கண்ணடித்து கேட்டாள்.
அவள் கேள்வியில் அதிர்ந்து திரும்பியவன் பின் அவளின் குறும்பை உணர்ந்து “போடி...” என்று சிவந்த முகத்தை காட்டாமல் உள்ளே சென்று கதவடைத்தான்.
அவன் மறைத்தாலும் அது அவனையே பார்த்துக்கொண்டிருந்த மதியின் பார்வையில் விழுந்து விட, “மாமாக்கு வெட்கம் வந்துடிச்சி டோய்... என்ன நான் பண்ண வேண்டியதெல்லாம் மாமா பண்ணிட்டு போறாரு” என்று கூறி தலையில் செல்லமாக அடித்தவள் மறக்காமல் அவள் செல்லையும் அரசனின் செல்லையும் சார்ஜரில் போட்டுவிட்டு மனதில் தோன்றிய பாடலை வாய்விட்டு
பாடியபடி தயாராகத் தொடங்கினாள்.
கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா
ஒஹ் கொக்கரக்கோ சேவலா
கோழிக்கி நீ காவலா
நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
Last edited: