அத்தியாயம் – 18
சந்தோஷ் சொன்னது போலவே தீபிகாவால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை.. அவன் இதுவரை பொய்யாக தன்னிடம் நடித்தான் என்று உணர்ந்தவளுக்கு கோபம் அதிகரித்ததே தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியவில்லை..
சந்தோஷ், பிரியா, மித்ரா மூவரும் காரில் ஏறியதும் காரை எடுத்தான்.. “அண்ணா உன்னிடம் இப்படியொரு செயலை நான் எதிர்பார்க்கவே இல்ல..” என்ற மித்ரா பிரியாவின் பக்கம் திரும்பி, “என்னோட அண்ணி..” என்று அவளின் கன்னத்தைக் கிள்ளிச் சிரிக்க அவளின் கையைத் தட்டிவிட்டாள் பிரியா..
அவளின் செயலில் மித்ராவின் முகம் வாடிபோக, “ஏய் தேனு என்ன பழக்கம் இது..” என்றவன் அவளை உரிமையோடு அதட்ட பிரியாவின் கோபம் அதிகரிக்க, “சந்தோஷ் நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்கிற தெரியுமா..” என்றவள் கொலைவெறியுடன் கேட்டாள்..
“அண்ணா வண்டியை நிறுத்து நாங்க ஸ்கூட்டியில் வந்தோம்.. நான் அண்ணியோட ஸ்கூட்டி எடுத்துட்டு அதில் வருகிறேன்.. நீங்க இருவரும் காரில் வாங்க..” என்றவள் காரை நிறுத்த சொல்லி இறங்கிக் கொண்டாள்..
அவள் இறங்கும் வரை பொறுமையாக இருந்த சந்தோஷ், “நல்ல தெரியுமே உன்னோட கழுத்தில் தாலி கட்டியிருக்கேன்..” என்றவன் காரை எடுத்தான்..
“ஏண்டா நீ வீம்பிற்கு திருமணம் பண்ண நான் தான் கிடைத்தேனா..?” என்றவள் கோபத்தோடு கேட்டாள்.. அவளின் கேள்வியில் காரை நிறுத்திய சந்தோஷ், “ஏன் நீ வீம்பே பண்ணலையா..?” என்று கேட்டான்..
“நான் எப்போ உன்னிடம் வீம்பு பண்ணினேன்.. நான் உண்டு என்னோட வேலை உண்டு என்று இருப்பது உனக்கு வீம்பு பண்ணுவது போல இருக்கிறதா..?” என்றவனிடம் எகிறினாள் பிரியா..
“ஆமாண்டி நீ வீம்பிற்கு தான் பண்ணிட்டு இருக்கிற..” என்றவன் தொடர்ந்து, “இப்போ இல்ல கிட்டத்தட்ட நாலு வருசமாக இதையேதான் நீ பண்ணிட்டு இருக்கிற..” என்றவன் எரிச்சலோடு கூறினான்..
“யாரு நானா..?” என்றவள் கோபத்தோடு கேட்க, “ஆமாண்டி நீதான்..” என்றான் சந்தோஷ் திமிரோடு..
“ஏன் சந்தோஷ் என்னை கொண்டுபோய் புது புது பிரச்சனையில் சிக்க வைக்கிற.. அப்படி நான் உனக்கு என்னடா பாவம் பண்ணினேன்..” என்றவள் கேட்டதும் சந்தோஷ் கோபம் அதிகரித்தது..
“யாரு நான் உன்னை கொண்டுபோய் பிரச்சனையில் சிக்க வைத்தேனா..? அன்னைக்கு அவளிடம் பிரச்சனையை விலைக்கு வாங்கிட்டு வந்தது நீதான்.. நான் இல்ல..” என்றவன் கோபத்துடன்...
“என்னைக்கு நான் யாரிடம் பிரச்சனையை விலைக்கு வாங்கிட்டு வந்ததை நீ பார்த்த..?” என்றவள் மேலும் அவனின் கோபத்தை தூண்டிவிட்டாள்..
“ஏன் நீ வாங்கிட்டே வரல.. ஒருத்தி என்மேல் உனக்கு உரிமை இல்லன்னு சொன்னால் கண்ணைக் கசக்கிட்டு வந்தீயே.. அப்போ தெரியலையா பிரச்சனையை விலைக்கு வாங்கிட்டு வந்திருக்கிற.. அது புரியாமல் என்னவோ பேசற பேச்சு” என்றவன் கோபத்துடன் சொல்லியவன் ஸ்டேரிங்கை குத்தினான்..
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த பிரியாவோ, “சந்தோஷ் அன்னைக்கு தீபி பேசியது..” என்றவள் இழுக்க, “எனக்கு எல்லாமே தெரியும்..” என்றவன் வாக்கியத்தை முடித்தான்..
“எல்லாம் தெரிஞ்சிதான் நீ தீபிகாவை லவ் பண்ணிட்டு இருந்திருக்க இல்ல..” என்று கேட்டவளின் குரல் கரகரத்தது.. சந்தோஷ் நிமிர்ந்து பிரியாவின் முகம் பார்த்து, “ஆமாம் அதுக்கு இப்போ என்ன..?” என்றவன் கோபத்தின் உச்சியில் நின்று கேட்டான்..
“நீ செய்திருப்பது பெரிய பிழையென்று உனக்கு புரியல..” என்றவள் கேட்டதும், “அன்னைக்கு எனக்கு அவளுக்கு பதிலடி கொடுக்கணும் என்பதைவிட நீ ஏதாவது செய்து கொள்வாயோ என்ற பயம்தான் அதிகமாக இருந்தது..” என்றவன் அன்றைய மனநிலையை அவளிடம் கூறினான்..
“இன்னைக்கு நீ கொடுத்த இதே பதிலடியை நீயே அப்போ கொடுத்திருக்கலாமே..” என்றவள் கேட்டுகொண்டே அவனின் முகம் பார்க்க, “இதே கேள்வியை நான் உன்னிடம் கேட்டா..?” என்றவன் இடதுபுருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான் சந்தோஷ்..
“எனக்கு புரியல..” என்றவள் சொல்ல, “அன்னைக்கு அவள் சொன்ன பொழுது என்னோட அத்துவை நான்தான் திருமணம் செய்வேன்.. உன்னால் முடிந்ததைப் பாருடி என்று நீ சொல்லி இருக்க வேண்டியதுதானே..? நீ அப்படி சொல்லியிருந்தா பிரச்சனை அன்றோடு முடிந்திருக்குமே..” என்றவன் கேட்க அவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள்..
“அது நீ யாரையோ திருமணம் செய்வதைப் பார்க்க என்னால முடியாது..” என்றவள் தலையைக் குனிந்துகொண்டு கண்ணீரோடு சொல்ல, “நான் யாரைத் திருமணம் செய்கிறேன் என்ற முடிவை நான் எடுப்பேன்.. ஆனால் அன்னைக்கு நீ அந்த இடத்தில் பேசி இருந்தா யாருக்கும் ஏதும் ஆகிருக்காதே..” என்றவன் அவளுக்கு அவளின் தவறைப் புரிய வைக்க முயன்றான்..
“எனக்கு அந்த உரிமை இல்ல..” என்றவள் சொல்ல, “உனக்கு உரிமை இல்லை என்று யார் சொன்னது..? நானா..? இல்ல என்னோட அம்மா, அப்பா சொன்னாங்களா..?” என்றவன் அவளிடம் கேட்டான்..
அதுவரை அவனின் மனதில் அடைத்து வைத்திருந்தது எல்லாம் வார்த்தையாக வெளியே வர, “யாரோ ஒருத்தி சொன்னால் என்று என்னை எந்தளவுக்கு சித்தரவதை பண்ணிருக்க தெரியுமா..?” என்றவனின் கோபம் அதிகரித்தது.. அவள் ஒவ்வொரு முறை விலகி செல்லும் பொழுதும், மெளனமாக இருக்கும் பொழுதும் அவளின் காதலை அவன் நன்றாக உணர்ந்திருந்தான்..
“அப்போவே நீ பதிலடி அவளுக்கு கொடுத்திருந்தால் இன்னைக்கு நம்ம இருவரும் எதற்காக சண்டை போட வேண்டிய அவசியமே வந்திருக்காதே..?” என்றவனின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.. அவனுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அவனின் காதலை அவள் உணர்ந்தாளா என்று கேட்டால் அதற்கான விடை அவளுக்கே தெரியாது என்றே சொல்லலாம்..
“சின்ன வயதில் இருந்து உன்னை எனக்கு தெரியும் பிரியா.. என்னோட தங்கைகளை விட உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதெல்லாம் ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தையில் சொல்ல முடியுமா..?” என்றவன் அவளின் முகம் பார்த்துவிட்டு தொடர்ந்தான்..
“அத்து என்று நீ என்னை அழைக்கும் போது எல்லாம் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா..? ஆயிரம் பேர் என்னை சந்தோஷ் என்று கூப்பிட்டாலும் என்னோட சந்தோஷம் எல்லாம் நீ கூப்பிடும் அத்து என்ற அழைப்பில் இருக்கு அதை எனக்கே உணரவைத்தவள் நீ..” என்றவன் தொடர்ந்தான்..
அவனின் மனதில் பிரியாவை எந்த அளவிற்கு நேசிக்கிறான் என்று அவனின் வார்த்தைகளால் அவளுக்கு உணர்த்தும் முயற்சியில் இறங்கிவன், “எவளோ சொன்னதும் நீ அத்து என்று கூப்பிடுவது இல்ல.. அதோட விட்டாயா இல்லையே.. காலேஜ் சேரும் பொழுது என்ன அல்சாட்டியம் பண்ணினாய்..” என்றவன் சொல்ல பிரியாவின் துடிப்புதான் அதிகமானது..
அவள் மனதளவில் பட்ட காயத்திற்கு அவன் தன்னுடைய செயலில் மருந்திட்டுவிட்டான்.. ஆனால் காதலித்தவளோ அவனுக்கு காயத்தையே பரிசளித்திருக்கிறாள் என்று அவளே உணராத பொழுது நமக்கு எப்படி தெரியும் அவனின் வலி என்னவென்று..!
“அவள் வந்து எனக்கு பிரபோஸ் பண்ணும் பொழுது கூட நீ அமைதியாக இருந்தாய் இல்ல.. அதுக்கு பிறகு எத்தனை முறை அவள் வந்து உன்னை சீண்டி இருப்பா.. அப்பொழுது எல்லாம் மெளனமாக இருந்தாய்..” என்றவன் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்..
அவள் முகத்தை மூடிக்கொண்டு கதறியழுக, “நல்ல அழு.. யாரோ செய்த தவறுக்கு என்னை குற்றவாளி ஆக்கியதோடு மட்டும் இல்லாமல் எனக்கு தண்டனை கொடுத்த இல்ல.. எனக்கு தண்டனைக் கொடுக்க நீ யாருடி..? பாவம் ஒரு பக்கம்.. அதோட பழியை மட்டும் நான் சுமக்கனுமா..?” என்றவன் ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாகக் கேட்டான்..
அப்பொழுதும் மெளனமாக இருக்க, “நான் விட்டு தந்தால்தான் நீ வாழ முடியும் என்று அவளிடம் நீ ஒருமுறை சொல்லி இருக்கலாமே பிரியா..” என்றவன் வருத்தத்தோடு கேட்க, “என்னால சொல்ல முடியல..” என்றாள் பிரியா தன்னுடைய மௌனத்தை உடைத்தெறிந்த வண்ணம்..!
“அமைதி, பொறுமை, மௌனம் எல்லாம் எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் நீ பயன்படுத்தவே இல்ல.. இப்போ என்னவோ என்னிடம் வந்து வானத்திற்கு பூமிக்கும் குதிக்கிற..” என்றவனின் கோபம் தணியும் நேரத்தில் மீண்டும் ஆரம்பித்தாள் பிரியா..
“இப்போ கூட நீ செய்தது தப்பாக தெரியலையா சந்தோஷ்..” என்றவள் அவனின் முகத்தைப் பார்த்து கேட்க, “பிரியா நீ புரியாமல் பேசறீயா என்று எனக்கு புரியலடி.. உன்னோட மௌனம், உன்னோட விலகல் எல்லாம் புரிந்த எனக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு புரியல..” என்றான் அவன் வருத்தத்தோடு..
“எனக்காக இதுவரை நீ ஒரு வார்த்தைக்கூட பேசல சந்தோஷ்.. நீ தீபிகாவை விரும்பிகிறேன் என்று சொல்லும் பொழுது நான் ஏன் உங்களைப் பிரிக்க நினைக்கணும்.. இப்போ கூட அவளிடம் தோற்று போக கூடாது என்று என்னோட கழுத்தில் தாலி கட்டிருக்க என்ற உண்மை உனக்கு புரியுதா..?” என்றவள் கேட்டதும் அவனின் முகம் செந்தணலாக மாரிவிட்டது..
“அடியேய் உனக்கு என்ன பைத்தியமா..? உன்னோட மனசில் நீ பட்ட காயத்திற்கு அவளுக்கு நான் பதிலடி கொடுக்கணும் என்ற அவசியம் எனக்கு எதுக்குடி வந்தது.. பிரியா நீ அவள் முன்னாடி தோற்றுப்போக கூடாது என்று நான் பொறுமையாக இருந்தது என்னோட தவறா..?” என்றவன் அவளிடம் கேட்டதும் நொடிகூட யோசிக்காத பிரியா, “ஆமா..” என்றாள் அழுத்தத்துடன்..
“சின்ன வயதில் இருந்து கூட வளர்ந்த உனக்கு இல்லாத உரிமையா அவளுக்கு இருக்கு.. முதலில் ஒன்று மட்டும் புரிஞ்சிக்கோ பிரியா, நம்மளை மட்டம் தட்டும் பொழுதே அவங்களுக்கு உண்டான பதிலடி கொடுக்கணும்.. இல்லாட்டி இவள்தானே என்ற எண்ணம் வந்துவிடும்.. மறுபடி மறுபடி சீண்டிக்கிட்டே இருப்பாங்க..” என்றவன் சொல்லிவிட்டு காரை எடுத்தான்..
தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தவள், “எனக்கு உன்னோட வாழ விருப்பம் இல்ல சந்தோஷ்..” என்றவள் பிடிவாதமாக சொல்ல, “சரிடி எனக்கும் ஒரு மனசு இருக்கு.. உனக்கு என்னோட வாழ விருப்பம் இல்லையென்றால் என்னைத் தூக்கி எறிஞ்சிட்டு போ..” என்றவன் காரை வீட்டின் முன்னாடி நிறுத்தினான்..
“அப்போ எதுக்குடா எனக்கு இந்த தாலியை என்னோட கழுத்தில் கட்டின..?” என்றவள் அவளிடம் கேட்டாள்.. உடனே காரைவிட்டு இறங்கிய சந்தோஷ், “இதே கேள்வியை வீட்டிற்குள் வந்து கேளுடி.. அதுக்கு உண்டான பதிலை நான் கொடுக்கிறேன்..” என்றவன் சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தான்..
அவர்களுக்கு முன்னாடி வீட்டிற்கு வந்த மித்ரா எல்லோரிடமும் அவர்களின் திருமணத்தைப் பற்றி சொல்லிவிட்டாள்.. வீட்டில் இருந்த எல்லோருக்கும் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தது என்றால், இன்னொரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருந்தது இவர்களின் திருமணம்..!
சந்தோஷ் சொன்னது போலவே தீபிகாவால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை.. அவன் இதுவரை பொய்யாக தன்னிடம் நடித்தான் என்று உணர்ந்தவளுக்கு கோபம் அதிகரித்ததே தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியவில்லை..
சந்தோஷ், பிரியா, மித்ரா மூவரும் காரில் ஏறியதும் காரை எடுத்தான்.. “அண்ணா உன்னிடம் இப்படியொரு செயலை நான் எதிர்பார்க்கவே இல்ல..” என்ற மித்ரா பிரியாவின் பக்கம் திரும்பி, “என்னோட அண்ணி..” என்று அவளின் கன்னத்தைக் கிள்ளிச் சிரிக்க அவளின் கையைத் தட்டிவிட்டாள் பிரியா..
அவளின் செயலில் மித்ராவின் முகம் வாடிபோக, “ஏய் தேனு என்ன பழக்கம் இது..” என்றவன் அவளை உரிமையோடு அதட்ட பிரியாவின் கோபம் அதிகரிக்க, “சந்தோஷ் நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்கிற தெரியுமா..” என்றவள் கொலைவெறியுடன் கேட்டாள்..
“அண்ணா வண்டியை நிறுத்து நாங்க ஸ்கூட்டியில் வந்தோம்.. நான் அண்ணியோட ஸ்கூட்டி எடுத்துட்டு அதில் வருகிறேன்.. நீங்க இருவரும் காரில் வாங்க..” என்றவள் காரை நிறுத்த சொல்லி இறங்கிக் கொண்டாள்..
அவள் இறங்கும் வரை பொறுமையாக இருந்த சந்தோஷ், “நல்ல தெரியுமே உன்னோட கழுத்தில் தாலி கட்டியிருக்கேன்..” என்றவன் காரை எடுத்தான்..
“ஏண்டா நீ வீம்பிற்கு திருமணம் பண்ண நான் தான் கிடைத்தேனா..?” என்றவள் கோபத்தோடு கேட்டாள்.. அவளின் கேள்வியில் காரை நிறுத்திய சந்தோஷ், “ஏன் நீ வீம்பே பண்ணலையா..?” என்று கேட்டான்..
“நான் எப்போ உன்னிடம் வீம்பு பண்ணினேன்.. நான் உண்டு என்னோட வேலை உண்டு என்று இருப்பது உனக்கு வீம்பு பண்ணுவது போல இருக்கிறதா..?” என்றவனிடம் எகிறினாள் பிரியா..
“ஆமாண்டி நீ வீம்பிற்கு தான் பண்ணிட்டு இருக்கிற..” என்றவன் தொடர்ந்து, “இப்போ இல்ல கிட்டத்தட்ட நாலு வருசமாக இதையேதான் நீ பண்ணிட்டு இருக்கிற..” என்றவன் எரிச்சலோடு கூறினான்..
“யாரு நானா..?” என்றவள் கோபத்தோடு கேட்க, “ஆமாண்டி நீதான்..” என்றான் சந்தோஷ் திமிரோடு..
“ஏன் சந்தோஷ் என்னை கொண்டுபோய் புது புது பிரச்சனையில் சிக்க வைக்கிற.. அப்படி நான் உனக்கு என்னடா பாவம் பண்ணினேன்..” என்றவள் கேட்டதும் சந்தோஷ் கோபம் அதிகரித்தது..
“யாரு நான் உன்னை கொண்டுபோய் பிரச்சனையில் சிக்க வைத்தேனா..? அன்னைக்கு அவளிடம் பிரச்சனையை விலைக்கு வாங்கிட்டு வந்தது நீதான்.. நான் இல்ல..” என்றவன் கோபத்துடன்...
“என்னைக்கு நான் யாரிடம் பிரச்சனையை விலைக்கு வாங்கிட்டு வந்ததை நீ பார்த்த..?” என்றவள் மேலும் அவனின் கோபத்தை தூண்டிவிட்டாள்..
“ஏன் நீ வாங்கிட்டே வரல.. ஒருத்தி என்மேல் உனக்கு உரிமை இல்லன்னு சொன்னால் கண்ணைக் கசக்கிட்டு வந்தீயே.. அப்போ தெரியலையா பிரச்சனையை விலைக்கு வாங்கிட்டு வந்திருக்கிற.. அது புரியாமல் என்னவோ பேசற பேச்சு” என்றவன் கோபத்துடன் சொல்லியவன் ஸ்டேரிங்கை குத்தினான்..
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த பிரியாவோ, “சந்தோஷ் அன்னைக்கு தீபி பேசியது..” என்றவள் இழுக்க, “எனக்கு எல்லாமே தெரியும்..” என்றவன் வாக்கியத்தை முடித்தான்..
“எல்லாம் தெரிஞ்சிதான் நீ தீபிகாவை லவ் பண்ணிட்டு இருந்திருக்க இல்ல..” என்று கேட்டவளின் குரல் கரகரத்தது.. சந்தோஷ் நிமிர்ந்து பிரியாவின் முகம் பார்த்து, “ஆமாம் அதுக்கு இப்போ என்ன..?” என்றவன் கோபத்தின் உச்சியில் நின்று கேட்டான்..
“நீ செய்திருப்பது பெரிய பிழையென்று உனக்கு புரியல..” என்றவள் கேட்டதும், “அன்னைக்கு எனக்கு அவளுக்கு பதிலடி கொடுக்கணும் என்பதைவிட நீ ஏதாவது செய்து கொள்வாயோ என்ற பயம்தான் அதிகமாக இருந்தது..” என்றவன் அன்றைய மனநிலையை அவளிடம் கூறினான்..
“இன்னைக்கு நீ கொடுத்த இதே பதிலடியை நீயே அப்போ கொடுத்திருக்கலாமே..” என்றவள் கேட்டுகொண்டே அவனின் முகம் பார்க்க, “இதே கேள்வியை நான் உன்னிடம் கேட்டா..?” என்றவன் இடதுபுருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான் சந்தோஷ்..
“எனக்கு புரியல..” என்றவள் சொல்ல, “அன்னைக்கு அவள் சொன்ன பொழுது என்னோட அத்துவை நான்தான் திருமணம் செய்வேன்.. உன்னால் முடிந்ததைப் பாருடி என்று நீ சொல்லி இருக்க வேண்டியதுதானே..? நீ அப்படி சொல்லியிருந்தா பிரச்சனை அன்றோடு முடிந்திருக்குமே..” என்றவன் கேட்க அவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள்..
“அது நீ யாரையோ திருமணம் செய்வதைப் பார்க்க என்னால முடியாது..” என்றவள் தலையைக் குனிந்துகொண்டு கண்ணீரோடு சொல்ல, “நான் யாரைத் திருமணம் செய்கிறேன் என்ற முடிவை நான் எடுப்பேன்.. ஆனால் அன்னைக்கு நீ அந்த இடத்தில் பேசி இருந்தா யாருக்கும் ஏதும் ஆகிருக்காதே..” என்றவன் அவளுக்கு அவளின் தவறைப் புரிய வைக்க முயன்றான்..
“எனக்கு அந்த உரிமை இல்ல..” என்றவள் சொல்ல, “உனக்கு உரிமை இல்லை என்று யார் சொன்னது..? நானா..? இல்ல என்னோட அம்மா, அப்பா சொன்னாங்களா..?” என்றவன் அவளிடம் கேட்டான்..
அதுவரை அவனின் மனதில் அடைத்து வைத்திருந்தது எல்லாம் வார்த்தையாக வெளியே வர, “யாரோ ஒருத்தி சொன்னால் என்று என்னை எந்தளவுக்கு சித்தரவதை பண்ணிருக்க தெரியுமா..?” என்றவனின் கோபம் அதிகரித்தது.. அவள் ஒவ்வொரு முறை விலகி செல்லும் பொழுதும், மெளனமாக இருக்கும் பொழுதும் அவளின் காதலை அவன் நன்றாக உணர்ந்திருந்தான்..
“அப்போவே நீ பதிலடி அவளுக்கு கொடுத்திருந்தால் இன்னைக்கு நம்ம இருவரும் எதற்காக சண்டை போட வேண்டிய அவசியமே வந்திருக்காதே..?” என்றவனின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.. அவனுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அவனின் காதலை அவள் உணர்ந்தாளா என்று கேட்டால் அதற்கான விடை அவளுக்கே தெரியாது என்றே சொல்லலாம்..
“சின்ன வயதில் இருந்து உன்னை எனக்கு தெரியும் பிரியா.. என்னோட தங்கைகளை விட உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதெல்லாம் ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தையில் சொல்ல முடியுமா..?” என்றவன் அவளின் முகம் பார்த்துவிட்டு தொடர்ந்தான்..
“அத்து என்று நீ என்னை அழைக்கும் போது எல்லாம் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா..? ஆயிரம் பேர் என்னை சந்தோஷ் என்று கூப்பிட்டாலும் என்னோட சந்தோஷம் எல்லாம் நீ கூப்பிடும் அத்து என்ற அழைப்பில் இருக்கு அதை எனக்கே உணரவைத்தவள் நீ..” என்றவன் தொடர்ந்தான்..
அவனின் மனதில் பிரியாவை எந்த அளவிற்கு நேசிக்கிறான் என்று அவனின் வார்த்தைகளால் அவளுக்கு உணர்த்தும் முயற்சியில் இறங்கிவன், “எவளோ சொன்னதும் நீ அத்து என்று கூப்பிடுவது இல்ல.. அதோட விட்டாயா இல்லையே.. காலேஜ் சேரும் பொழுது என்ன அல்சாட்டியம் பண்ணினாய்..” என்றவன் சொல்ல பிரியாவின் துடிப்புதான் அதிகமானது..
அவள் மனதளவில் பட்ட காயத்திற்கு அவன் தன்னுடைய செயலில் மருந்திட்டுவிட்டான்.. ஆனால் காதலித்தவளோ அவனுக்கு காயத்தையே பரிசளித்திருக்கிறாள் என்று அவளே உணராத பொழுது நமக்கு எப்படி தெரியும் அவனின் வலி என்னவென்று..!
“அவள் வந்து எனக்கு பிரபோஸ் பண்ணும் பொழுது கூட நீ அமைதியாக இருந்தாய் இல்ல.. அதுக்கு பிறகு எத்தனை முறை அவள் வந்து உன்னை சீண்டி இருப்பா.. அப்பொழுது எல்லாம் மெளனமாக இருந்தாய்..” என்றவன் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்..
அவள் முகத்தை மூடிக்கொண்டு கதறியழுக, “நல்ல அழு.. யாரோ செய்த தவறுக்கு என்னை குற்றவாளி ஆக்கியதோடு மட்டும் இல்லாமல் எனக்கு தண்டனை கொடுத்த இல்ல.. எனக்கு தண்டனைக் கொடுக்க நீ யாருடி..? பாவம் ஒரு பக்கம்.. அதோட பழியை மட்டும் நான் சுமக்கனுமா..?” என்றவன் ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாகக் கேட்டான்..
அப்பொழுதும் மெளனமாக இருக்க, “நான் விட்டு தந்தால்தான் நீ வாழ முடியும் என்று அவளிடம் நீ ஒருமுறை சொல்லி இருக்கலாமே பிரியா..” என்றவன் வருத்தத்தோடு கேட்க, “என்னால சொல்ல முடியல..” என்றாள் பிரியா தன்னுடைய மௌனத்தை உடைத்தெறிந்த வண்ணம்..!
“அமைதி, பொறுமை, மௌனம் எல்லாம் எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் நீ பயன்படுத்தவே இல்ல.. இப்போ என்னவோ என்னிடம் வந்து வானத்திற்கு பூமிக்கும் குதிக்கிற..” என்றவனின் கோபம் தணியும் நேரத்தில் மீண்டும் ஆரம்பித்தாள் பிரியா..
“இப்போ கூட நீ செய்தது தப்பாக தெரியலையா சந்தோஷ்..” என்றவள் அவனின் முகத்தைப் பார்த்து கேட்க, “பிரியா நீ புரியாமல் பேசறீயா என்று எனக்கு புரியலடி.. உன்னோட மௌனம், உன்னோட விலகல் எல்லாம் புரிந்த எனக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு புரியல..” என்றான் அவன் வருத்தத்தோடு..
“எனக்காக இதுவரை நீ ஒரு வார்த்தைக்கூட பேசல சந்தோஷ்.. நீ தீபிகாவை விரும்பிகிறேன் என்று சொல்லும் பொழுது நான் ஏன் உங்களைப் பிரிக்க நினைக்கணும்.. இப்போ கூட அவளிடம் தோற்று போக கூடாது என்று என்னோட கழுத்தில் தாலி கட்டிருக்க என்ற உண்மை உனக்கு புரியுதா..?” என்றவள் கேட்டதும் அவனின் முகம் செந்தணலாக மாரிவிட்டது..
“அடியேய் உனக்கு என்ன பைத்தியமா..? உன்னோட மனசில் நீ பட்ட காயத்திற்கு அவளுக்கு நான் பதிலடி கொடுக்கணும் என்ற அவசியம் எனக்கு எதுக்குடி வந்தது.. பிரியா நீ அவள் முன்னாடி தோற்றுப்போக கூடாது என்று நான் பொறுமையாக இருந்தது என்னோட தவறா..?” என்றவன் அவளிடம் கேட்டதும் நொடிகூட யோசிக்காத பிரியா, “ஆமா..” என்றாள் அழுத்தத்துடன்..
“சின்ன வயதில் இருந்து கூட வளர்ந்த உனக்கு இல்லாத உரிமையா அவளுக்கு இருக்கு.. முதலில் ஒன்று மட்டும் புரிஞ்சிக்கோ பிரியா, நம்மளை மட்டம் தட்டும் பொழுதே அவங்களுக்கு உண்டான பதிலடி கொடுக்கணும்.. இல்லாட்டி இவள்தானே என்ற எண்ணம் வந்துவிடும்.. மறுபடி மறுபடி சீண்டிக்கிட்டே இருப்பாங்க..” என்றவன் சொல்லிவிட்டு காரை எடுத்தான்..
தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தவள், “எனக்கு உன்னோட வாழ விருப்பம் இல்ல சந்தோஷ்..” என்றவள் பிடிவாதமாக சொல்ல, “சரிடி எனக்கும் ஒரு மனசு இருக்கு.. உனக்கு என்னோட வாழ விருப்பம் இல்லையென்றால் என்னைத் தூக்கி எறிஞ்சிட்டு போ..” என்றவன் காரை வீட்டின் முன்னாடி நிறுத்தினான்..
“அப்போ எதுக்குடா எனக்கு இந்த தாலியை என்னோட கழுத்தில் கட்டின..?” என்றவள் அவளிடம் கேட்டாள்.. உடனே காரைவிட்டு இறங்கிய சந்தோஷ், “இதே கேள்வியை வீட்டிற்குள் வந்து கேளுடி.. அதுக்கு உண்டான பதிலை நான் கொடுக்கிறேன்..” என்றவன் சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தான்..
அவர்களுக்கு முன்னாடி வீட்டிற்கு வந்த மித்ரா எல்லோரிடமும் அவர்களின் திருமணத்தைப் பற்றி சொல்லிவிட்டாள்.. வீட்டில் இருந்த எல்லோருக்கும் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தது என்றால், இன்னொரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருந்தது இவர்களின் திருமணம்..!