sakthipriya
SM Exclusive
View attachment 482
அத்தியாயம்-2
சௌமியா அழுவதைப் பார்த்த ஆதிரையன் காரை சட்டென்று நிறுத்தினான்.அத்தியாயம்-2
“ஏய்! சௌமி… அழறியா? சும்மா விளையாட்டுக்குதான் கேட்டேன். என் செல்லத்தை பற்றி எனக்கு தெரியாதா?”
“அண்ணா, உனக்கே தெரியும். நான் எப்பவும் யாரையும் காதலிக்க மாட்டேன். நீ பார்த்து இவன் நம்ம தங்கையை நல்லா பார்த்துக் கொள்ளுவான்னு நம்பி யாரையாவது கல்யாணம் செய்யுன்னு சொல்கிற வரைக்கும் நோ கல்யாணம் அதிலயும் காதலுக்கு என்னிக்குமே நோதான்” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
“சரி. என் சௌமி செல்லத்தை பற்றி எனக்கு தெரியாதாடா?”
“அப்புறம் ஏன் அண்ணா அப்படி கேட்டாய்? அது என்னை எவ்வளவு ஹர்ட் செஞ்சுச்சு தெரியுமா? போண்ணா” என்று செல்லமாகக் கோபித்தாள்.
“சரிடா செல்லம். அண்ணா இனி அப்படி கேட்கவே மாட்டேன் போதுமா? கொஞ்சம் சிரிடா. என் தங்கமில்லியா?” என்று வருந்தமாக கேட்டான்.
“அண்ணா…! நீ வருத்தப்படறியா? நானும் விளையாட்டுக்குதான் கோவிச்சுக்கற மாதிரி பேசினேன். என் அண்ணா என்னை பற்றி தப்பாக நினைப்பாரா?” என்று சிரித்தாள்.
“அப்ப அண்ணா மேலே உனக்கு?” என்று கேட்க “அண்ணா… உன்னை…” என்றாள்.
“சரிம்மா. உனக்கு ஏற்ற ஒரு நல்ல மாப்பிள்ளையாக உன்னை என்னை விட நல்லா பார்த்துக் கொள்கிற மாப்பிள்ளையான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் உன்னை நான் அவனுக்கு கட்டி வைப்பேன்”
“நானும் உடனே கட்டிப்பேன் ஆனால் அதற்கு முன்னால் என் கல்யாணத்தை முன்னால் நின்று நடத்த எனக்கு ஒரு அண்ணி வேண்டும்” என்றாள் சௌமியா.
“சௌமி என் வாழ்கையில் நடந்தது தெரியுமில்லையா? நான் எப்படிம்மா திரும்பி கல்யாணம் செய்கிறது?”
“அண்ணா, அது எல்லாம் முடியாது அண்ணி வந்துதான் எனக்கு கல்யாணம் நடக்கனும் இல்லை என்றால் எனக்கு கல்யாணமே வேண்டாம்” என்று பிடிவாதமாகச் சொன்னாள். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
“நான் என்ன சொன்னாலும் இல்லைன்னு சொல்லாமல் நீ செய்து தந்து முடித்து விடுகிறாய் அண்ணா. நான் கேட்காமலே பலவற்றை செய்து தந்து விடுகிறாய் அண்ணா ஆனால் கல்யாணப் பேச்சை எடுத்தால் மட்டும் ஏன் மறுக்கிறாய் அண்ணா?” என்று கேட்டாள்.
“சௌமி, உன் பர்த்டே அதுவுமாக நீ ஆசைப்பட்டு கேட்கிற விஷயத்தை நான் மறுக்க முடியாமல் நான் தவிக்கிறேன்” என்று அவன் வருத்தப்பட்டு சொன்னான் அண்ணன்.
“சாரி அண்ணா. உன்னை நான் கஷ்டப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். என் ஆசையை சொன்னேன் அவ்வளவுதான். உனக்கு ஒகே இல்லைன்னா வேண்டாம். என் அண்ணாவை நான் எப்பவும் முடியாதுன்னு சொல்ல விடமாட்டேன்.” என்றாள்.
ஆதிரையன் உடனே அவளைப் பார்த்து “என் சௌமிக்குட்டி அவள் பர்த்டே அதுவுமாக கஷ்டப்படக் கூடாது. எனக்கு முழு சம்மதம் ஆனால் ஒரு நிபந்தனை” என்று நிறுத்தினான் ஆதிரையன்.
“என்ன அண்ணா அது?” என்று அவனைப் பார்த்து அவள் கேட்க “என் சௌமி செல்லத்தை என்னை விட அதிகமாக பார்த்துக்கிற பொண்ணாக இருக்கனும். என் சௌமிக்கு அண்ணியாக இல்லாமல் அம்மாவாக இருக்கனும் அப்பதான் நான் கல்யாணம் செய்வேன்” என்றான் அண்ணன்.
“சரி அண்ணா நான் சீக்கீரமே உனக்கு அப்படி ஒரு பெண்ணை உனக்கு மனைவியாக சாரி எனக்கு அம்மாவாக கொண்டு வந்துக் காட்டறேன்” என்றாள்.
“அப்புறம் அண்ணா ஒரு நிமிஷம்” என்று அருகில் வந்து அவன் தோளில் கை வைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு “என் அண்ணான்னா அண்னாதான்” என்றாள்.
ஆதிரையன் காரை மறுபடியும் கிளப்ப “நான் முத்தம் கொடுக்க வசதியாகத்தானே காரை நிறுத்தினாய் அண்ணா” என்றாள்.
அண்ணன் சிரிக்க ஆனந்த யாழை மீட்டுகின்றாய் என்ற பாடலை அவள் செல்போனில் பிளே செய்தாள் சௌமியா.
“சௌமி நான் உன் அண்ணாடா. என்று அண்ணன் சொன்னவுடன் “நீ என் அப்பாவும் கூடத்தான்” என்றாள் சௌமியா.
“அண்ணா! வாங்க அவங்க நம்மளை நெருங்கிட்டு இருக்காங்க பாரு. அவங்க ஒவர் டேக் செஞ்சு போகாமல் நாமதான் முதல்ல போகனும் அண்ணா.” என்று குழந்தையாய் சொல்ல “ஒகே செல்லம்” என்று வேகத்தை அதிகப்படுத்தினான் ஆதிரையன்.
ஆதிரையனும் அவள் தங்கையும் ஆனந்தமாய் சென்றுக் கொண்டிருக்க, அவனை பின் தொடர்ந்து இளந்திரையனும் ஜெயகாந்தனும் வந்துக் கொண்டிருக்க, சௌமியா அவர்களை பார்த்தபடியும் கத்தியபடியும் வந்துக் கொண்டிருந்தாள்.
ஆதிரையன் ஒரு வளைவில் திரும்பி வரும் பொழுது ஆள் அரவமற்ற அந்த சாலையில் மையத்தில் ஒரிடத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண் வண்டியை நிறுத்துவதற்காக சாலையின் குறுக்கே நின்றுக் கொண்டு தன் துப்பட்டாவை மேலே தூக்கிக் காட்டினாள்.
“அண்ணா... தூரத்துல ஒரு பொண்ணு ரோட்டுக்கு குறுக்கே நிற்கிறாள். வண்டியை ஸ்லோ செஞ்சு நிறுத்து” என்றாள் சௌமியா.
“சரிம்மா” என்று அந்தப் பெண் நிற்கும் இடத்திற்கு சில அடிகள் முன் காரை நிறுத்தினான் ஆதிரையன். சௌமியா காரை திறந்து சீட்பெல்ட்டை கழட்டி விட்டு இறங்கி அவளிடம் வரும் பொழுதுதான் கவனித்தாள்.
Last edited: