- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 6
மும்பையில் அபிஜித் வீட்டின் பெரிய தோட்டத்தில், சின்ன அளவிளான மேடை அமைத்து, அதில் மணமகளான பவித்ரசெல்வியை அமர வைத்தனர். அவளை சுற்றி நான்கு பெண்கள் அமர்ந்து, அவள் கையிலும், காலிலும் மெஹெந்தி போட்டுக் கொண்டு இருந்தனர்.
அந்த காலை வேளையிலே, விருந்தினர் வருகையால் கல்யாண வீட்டிற்க்கான எல்லா அம்சமும் அங்கே காணப்பட்டது. இந்த மெஹெந்தி விழாவிற்கு, இவளின் வீட்டில் பாட்டி, அப்பா, அம்மா, தம்பி, அத்தை, அத்தை பெண்ணும், அவளின் கணவரும், பவித்ராவின் தோழிகளும் வந்து இருந்தனர்.
தினேஷுக்கும், அனுவுக்கும் போன வாரம் தான் திருமணம் முடிந்து இருந்தது. இருவரும் தேனிலவிற்கு, ஊட்டி சென்று இருந்தனர். நாளை திருமணத்திற்க்கு வருவதாக கூறி இருந்தனர்.
இவளை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் ஹிந்தியில் பேசும் பொழுது, இவளுக்கு எரிச்சல் வந்தாலும் அதை மறைக்க அவள் பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது.
பள்ளி படிக்கும் பொழுதே, ஹிந்தி கட்டாய பாடம் எட்டு வரைக்கும் என்று அறிவித்த பின்னர், முதலில் இவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அது அவளுக்கு, போக போக எரிச்சல் தரும் பாடமாகவே அமைந்து விட்டது.
ஹிந்தி ஆசிரியர் ஆத்தா ஹை என்று கூற சொன்னால், இவள் ஜாத்தா ஹை என்று கூறும் ரகம். இவளுக்கும் ஹிந்திக்கும் எப்பொழுதும், வேர்ல்ட் வார் யுத்தமே நடக்கும்.
அப்படிப்பட்டவள், இன்று அவளின் உயிரானவன் ஒரு ஹிந்தி பேசும் இனத்துக்குரியவன் என்று தெரிந்தும், அவனை கரம் பிடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாள் என்றால், அது அவன் மேல் இவள் வைத்து இருக்கும் அன்பு மட்டும் காரணம் இல்லை.
அவன் இவளுக்கு வழங்கிய அன்பும், பாதுக்காப்பு உணர்வும் மட்டுமே இவளை சம்மதிக்க வைத்து இருக்கிறது. தந்தைக்கு பிறகு, அவள் ஒரு ஆணுடன் உணர்ந்த பாதுகாப்பு உணர்வை அபிஜித் அவளுக்கு கொடுத்தான்.
அது மட்டுமில்லாமல், முதல் முதலில் இவனை பார்த்த பிறகு அவள் உணர்ந்தது, ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் அவனுக்கும் தனக்கும் இருப்பதை உணர்ந்தது தான், இந்த கல்யாணம் வரை இன்று வந்து இருக்கிறது.
“பேட்டா, யஹா ஆயோ!(மகனே இங்க வா)” என்று அபிஜித் அன்னை அவனை அழைத்தார்.
“கியா மா! கியா கோல் கரேன்?(என்ன அம்மா! எதுக்கு கூப்பிடீங்க?)” என்று அபி அங்கே அவன் அன்னை அருகே வந்து கேட்டான்.
“லட்கி கே பாஸ் பைட்டோ(பொண்ணு பக்கத்துல போய் உட்காரு)” என்று கட்டளையிட்டார்.
அவனும் அவரின் சொல் பேச்சு கேட்டு, பவியின் அருகே சென்று அமர்ந்து, யாரும் அறியாமல் அவளை பார்த்து கண்ணடித்தான். அப்பொழுது தான் மெஹெந்தி போட்டு முடித்து இருந்தனர், அந்த பெண்கள்.
அவர்கள் போட்டு முடித்த பின்பு, அங்கு இருந்து சென்ற பின் தான் இவனின் அன்னை இவனை அழைத்து இங்கே அவள் அருகில் அமர சொன்னார். வந்தவன், அவளை சீண்ட கன்னடிக்கவும், இவள் முறைத்தாள்.
“என்ன பேபி, என்னை ஏன் முறைக்குற? உன்னை பார்த்து தான கண்ணடிச்சேன், அதுக்கு ஏன் என்னை முறைக்குற?” என்று ஒன்றும் தெரியாதவன் போல், சிரித்துக் கொண்டே கேட்டான்.
“ஏன்னு உங்களுக்கு தெரியாது? நான் என்ன சொன்னேன் உங்க கிட்ட, நல்லா ஹிந்தி பேச கத்துகிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் சொன்னேனே. நீங்க அப்போ எல்லாம் சரி சொல்லிட்டு, அப்புறம் ஏன் இப்படி உடனே ஏற்பாடு செய்தீங்க?”.
“இப்போ பாருங்க, நானும் அத்தையும் தினம் மூன்றாம் பிறை கமல் மாதிரி, சைகையில் பேசிகிட்டு இருக்கோம். அதுல பாதி நேரம், அந்த கமல் மாதிரியே ஆகிடுது என் நிலைமை”.
“மேல குடத்தை தூக்கிட்டு, டான்ஸ் ஆடாதது ஒன்னு தான் குறை பார்த்துகோங்க” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
அவள் கூறிய பாவனையில், அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டான். அவனுமே முதலில் அவள் கூறியது போல் இருந்தால், அவளுக்கும் தன் வீட்டினரோடு பழக வசதியாக இருக்கும் என்று நினைத்தான். ஆனால் அவளின் தந்தையும், தாயும் அவளின் ஹிந்தி புலமையை தெளிவாக விளக்கவும், அவன் உடனே அதை கை விட்டான்.
“நானும் அதை தான் யோசிச்சேன் டா, ஆனா பாரு என் மாமனாரும், மாமியாரும் உன் ஹிந்தி திறமை பற்றி எல்லாம் சொன்னதும், உடனே நான் பிளான் மாத்திட்டேன். உனக்கு நானே சொல்லி தரேன், நீ ஏன் கவலை படுற?” என்று அவன் கூறி முடிக்கவும், அவனிற்கு அடுத்து அவள் அருகிலே சில சம்ப்ரதாயங்கள் செய்து கொண்டு இருந்தனர்.
“எனக்கு எதிரி வேற எங்கேயும் இல்லை, என்னை பெத்த தெய்வங்களே போதும்” என்று சலித்து கொண்டாள்.
அதற்குள் அபிஜித்க்கு செய்ய வேண்டிய சடங்கு முறைய செய்துவிட்டு, அதன் பின் இருவருக்கும் சேர்ந்து ஆரத்தி சுற்றி எடுத்தனர். அதன் பின் இவளை அபிஜித்தின் உறவு பெண்கள் அழைத்து சென்று, அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் விட்டு சென்றனர்.
அவள் அடுத்து மாலை உடுத்த வேண்டிய திருமண நிச்சய புடவையை, அபிஜித்தின் அன்னை கொடுத்துவிட்டு சென்றார்.
“ஆண்டவா! நம்ம ஊர் பட்டு புடவையே தேவலை போல, இந்த புடவையை உடுத்திட்டு நிற்க முடியல. அவ்வளவு வெயிட், இதை சுமக்கவே நான் நிறைய சாப்பிடனும் போல” என்று நொந்து கொண்டு இருந்தாள்.
அறைக்குள் இவளின் அன்னை, அவளுக்கு அப்பொழுது மதிய உணவை கொடுக்க வந்தார். அவர் கையில் இருந்த தட்டையும், அதில் இருந்த வகையறாவையும் பார்த்து, பயந்து போனாள்.
“அம்மா! என்ன மா இது? நான் ஒருத்தி தான சாப்பிட போறேன், அதுக்கு ஏன் இவ்வளவு?” என்று அரண்டு போய் கேட்டாள்.
“எனக்கு என்ன டி தெரியும்? சம்மந்தி அம்மா தான் கொடுத்து விட்டாங்க, இதுவும் அவங்க இதுல ஒரு சம்ப்ரதாயம் போல டி”.
“சரி! சரி! கையை அசைக்காத, நல்லா மருதாணி காயட்டும்.நான் உனக்கு ஊட்டுறேன், முதல ஸ்வீட் சாப்பிடு” என்று கூறிவிட்டு அவளுக்கு ஒவ்வொன்றாக எடுத்து ஊட்ட தொடங்கினார்.
அவர் ஊட்ட ஊட்ட, இவள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள். சரியாக இவள் சாப்பிட்டு முடித்த பிறகு, அங்கே அபிஜித்தின் அத்தை பெண் ஒருத்தி வந்து அவளிடம், இன்னும் அரை மணி நேரம் கழித்து மெஹெந்தி கையையும், காலையும் கழுவி கொள்ளலாம் என்று கூறிவிட்டு சென்றாள்.
அவளுக்கு அதன் பிறகு தான் ஷப்பா என்று இருந்தது, இதுவரை இவ்வளவு நேரம் அவள் இப்படி கையை, காலை அசைக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்தது இல்லை, அதனால் வந்த பெருமூச்சு தான் இது.
“சரி டி, நான் போய் கீழே அடுத்து என்ன ஏற்பாடு செய்யணும் என்னனு பார்க்கிறேன். நீ அந்த பொண்ணு சொன்ன மாதிரி, அரை மணி நேரம் கழிச்சு கழுவிட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கு, நான் வந்து எழுப்புறேன்” என்று கூறிவிட்டு சென்றார்.
அவர் சென்ற பின், இவள் யோசனையில் ஆழ்ந்தாள். சிறிது நேரத்தில் கதவு மீண்டும் தட்டப்படவும், தன் தாயாக தான் இருக்கும் என்று எண்ணி உள்ளே வர கூறினாள்.
ஆனால் உள்ளே வந்ததோ அவள் அன்னை இல்லை, அவளை கரம் பிடிக்க போகும் மணாளன் அபிஜித். அவனை அப்பொழுது அந்த நேரத்தில் எதிர்பார்க்காததால், அவள் சற்று திடுகிட்டாள்.
“எதுக்கு இந்த ஷாக் பேபி? நான் தான் சொன்னேனே, உன் கிட்ட தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்னு பாக்கி இருக்கு, அதை வசூல் செய்ய வருவேன்னு, மறந்துட்டியா பேபி!” என்று அபிஜித் கூறவும் தான், அவளுக்கு அன்றைக்கு தான் செய்த முட்டாள்தனம் உரைத்தது.
“ஆண்டவா! எப்படி எல்லாம், நியாபகம் வச்சு கேட்குறான் இவன். இவன் இதை மறந்து இருப்பான் நினைச்சேன், கடவுளே நீங்க தான் காப்பாத்தனும் என்னை இப்போ” என்று மனதிற்குள் கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டு இருந்தாள், இதில் இருந்து தப்பிக்க.
“என்ன பேபி, இப்படி பயந்தாங்கோலியா இருக்க. நான் கூட உன்னை தைரியசாலின்னு நினைச்சேன், இப்படி பயப்புடுற!” என்று அவளை சீண்டினான்.
சீண்டியதோடு மட்டும் நிறுத்தாமல், அவளை நெருங்கி கொண்டு இருந்தான். அவளோ அவன் நெருங்கி வர வர, பின்னால் நகர்ந்து கொண்டு இருந்தாள்.
கையில் மருதாணியை வைத்துக் கொண்டு, அவனை தள்ளி விட கூட முடியாத சூழல். என்ன செய்யவென்று அவளுக்கு தெரியவில்லை, கண்களால் அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள், நகர்ந்து செல்லுமாறு.
அவனோ, அது புரிந்தும் புரியாதது போல் அவளை நெருங்கியது மட்டும் இல்லாமல், அவளின் இடையை பிடித்து தன்னருகே நிற்க வைத்தான். அவள் அணிந்து இருந்த, நார்த் இந்தியன் லேஹெங்கா புடவையில், அவன் கை அவளின் வெற்றிடையை பற்றி இருந்தது.
சொல்லொண்ணா உணர்வுகள், அவளை பிடித்து ஆட்டிக் கொண்டு இருந்தது. உதடுகள் துடிக்க, கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்தவளை பார்த்து, அவன் தன் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல், தன் முதல் முத்திரையை அவள் மூடிய இமைகளில் பதித்தான்.
அதில் அவள் மேனி சிலிர்த்து, நிற்க முடியாமல் தள்ளாடினாள். அதை உணர்ந்தவன், அவளை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்து அவள் விழாமல் பார்த்துக் கொண்டான்.
விது பேபி என்று அவள் காதில் ரகசியமாக முணுமுணுத்துவிட்டு, அவன் உதட்டை அவள் காதோடு உரசி விட்டு மேலும் துடிதுடிக்கும் அந்த இமைகளுக்கு மீண்டும் தன் முத்திரையை பதித்தான். அவளால் அதற்க்கு மேல் தாங்க முடியவில்லை, கையில் இருந்த மேஹெந்தியை மறந்து அவனை தன்னையறியாமல் கட்டிக் கொண்டாள்.
அதை அவன் தனக்கு அவள் அனுமதி வழங்கியதாக கருதி, அவனின் உதட்டை அவளின் உதட்டோடு சேர்த்து கவி எழுத நினைக்கையில் அவளின் அறை கதவு தட்டப்பட்டது.
அதில் சுய உணர்விற்கு வந்தவள், அவனை தன்னிடம் இருந்து பிரிக்க அவனை தள்ளி விட்டாள். திடிரென்று அவள் தள்ளி விடுவாள், என்று நினைக்காததால் அவன் தடுமாறி விழ போனான். அதற்குள் இவளே, அவனின் கை பிடித்து நிறுத்தி விட்டாள்.
“ஏய் செல்வி! என்ன டி இவ்வளவு நேரம், தூங்கிட்டியா?” என்று இவளின் அன்னை வெளியே இன்னும் பலமாக கதவை தட்டவும், அபிஜித் வேகமாக சென்று கதவை திறந்தான்.
மும்பையில் அபிஜித் வீட்டின் பெரிய தோட்டத்தில், சின்ன அளவிளான மேடை அமைத்து, அதில் மணமகளான பவித்ரசெல்வியை அமர வைத்தனர். அவளை சுற்றி நான்கு பெண்கள் அமர்ந்து, அவள் கையிலும், காலிலும் மெஹெந்தி போட்டுக் கொண்டு இருந்தனர்.
அந்த காலை வேளையிலே, விருந்தினர் வருகையால் கல்யாண வீட்டிற்க்கான எல்லா அம்சமும் அங்கே காணப்பட்டது. இந்த மெஹெந்தி விழாவிற்கு, இவளின் வீட்டில் பாட்டி, அப்பா, அம்மா, தம்பி, அத்தை, அத்தை பெண்ணும், அவளின் கணவரும், பவித்ராவின் தோழிகளும் வந்து இருந்தனர்.
தினேஷுக்கும், அனுவுக்கும் போன வாரம் தான் திருமணம் முடிந்து இருந்தது. இருவரும் தேனிலவிற்கு, ஊட்டி சென்று இருந்தனர். நாளை திருமணத்திற்க்கு வருவதாக கூறி இருந்தனர்.
இவளை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் ஹிந்தியில் பேசும் பொழுது, இவளுக்கு எரிச்சல் வந்தாலும் அதை மறைக்க அவள் பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது.
பள்ளி படிக்கும் பொழுதே, ஹிந்தி கட்டாய பாடம் எட்டு வரைக்கும் என்று அறிவித்த பின்னர், முதலில் இவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அது அவளுக்கு, போக போக எரிச்சல் தரும் பாடமாகவே அமைந்து விட்டது.
ஹிந்தி ஆசிரியர் ஆத்தா ஹை என்று கூற சொன்னால், இவள் ஜாத்தா ஹை என்று கூறும் ரகம். இவளுக்கும் ஹிந்திக்கும் எப்பொழுதும், வேர்ல்ட் வார் யுத்தமே நடக்கும்.
அப்படிப்பட்டவள், இன்று அவளின் உயிரானவன் ஒரு ஹிந்தி பேசும் இனத்துக்குரியவன் என்று தெரிந்தும், அவனை கரம் பிடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாள் என்றால், அது அவன் மேல் இவள் வைத்து இருக்கும் அன்பு மட்டும் காரணம் இல்லை.
அவன் இவளுக்கு வழங்கிய அன்பும், பாதுக்காப்பு உணர்வும் மட்டுமே இவளை சம்மதிக்க வைத்து இருக்கிறது. தந்தைக்கு பிறகு, அவள் ஒரு ஆணுடன் உணர்ந்த பாதுகாப்பு உணர்வை அபிஜித் அவளுக்கு கொடுத்தான்.
அது மட்டுமில்லாமல், முதல் முதலில் இவனை பார்த்த பிறகு அவள் உணர்ந்தது, ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் அவனுக்கும் தனக்கும் இருப்பதை உணர்ந்தது தான், இந்த கல்யாணம் வரை இன்று வந்து இருக்கிறது.
“பேட்டா, யஹா ஆயோ!(மகனே இங்க வா)” என்று அபிஜித் அன்னை அவனை அழைத்தார்.
“கியா மா! கியா கோல் கரேன்?(என்ன அம்மா! எதுக்கு கூப்பிடீங்க?)” என்று அபி அங்கே அவன் அன்னை அருகே வந்து கேட்டான்.
“லட்கி கே பாஸ் பைட்டோ(பொண்ணு பக்கத்துல போய் உட்காரு)” என்று கட்டளையிட்டார்.
அவனும் அவரின் சொல் பேச்சு கேட்டு, பவியின் அருகே சென்று அமர்ந்து, யாரும் அறியாமல் அவளை பார்த்து கண்ணடித்தான். அப்பொழுது தான் மெஹெந்தி போட்டு முடித்து இருந்தனர், அந்த பெண்கள்.
அவர்கள் போட்டு முடித்த பின்பு, அங்கு இருந்து சென்ற பின் தான் இவனின் அன்னை இவனை அழைத்து இங்கே அவள் அருகில் அமர சொன்னார். வந்தவன், அவளை சீண்ட கன்னடிக்கவும், இவள் முறைத்தாள்.
“என்ன பேபி, என்னை ஏன் முறைக்குற? உன்னை பார்த்து தான கண்ணடிச்சேன், அதுக்கு ஏன் என்னை முறைக்குற?” என்று ஒன்றும் தெரியாதவன் போல், சிரித்துக் கொண்டே கேட்டான்.
“ஏன்னு உங்களுக்கு தெரியாது? நான் என்ன சொன்னேன் உங்க கிட்ட, நல்லா ஹிந்தி பேச கத்துகிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் சொன்னேனே. நீங்க அப்போ எல்லாம் சரி சொல்லிட்டு, அப்புறம் ஏன் இப்படி உடனே ஏற்பாடு செய்தீங்க?”.
“இப்போ பாருங்க, நானும் அத்தையும் தினம் மூன்றாம் பிறை கமல் மாதிரி, சைகையில் பேசிகிட்டு இருக்கோம். அதுல பாதி நேரம், அந்த கமல் மாதிரியே ஆகிடுது என் நிலைமை”.
“மேல குடத்தை தூக்கிட்டு, டான்ஸ் ஆடாதது ஒன்னு தான் குறை பார்த்துகோங்க” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
அவள் கூறிய பாவனையில், அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டான். அவனுமே முதலில் அவள் கூறியது போல் இருந்தால், அவளுக்கும் தன் வீட்டினரோடு பழக வசதியாக இருக்கும் என்று நினைத்தான். ஆனால் அவளின் தந்தையும், தாயும் அவளின் ஹிந்தி புலமையை தெளிவாக விளக்கவும், அவன் உடனே அதை கை விட்டான்.
“நானும் அதை தான் யோசிச்சேன் டா, ஆனா பாரு என் மாமனாரும், மாமியாரும் உன் ஹிந்தி திறமை பற்றி எல்லாம் சொன்னதும், உடனே நான் பிளான் மாத்திட்டேன். உனக்கு நானே சொல்லி தரேன், நீ ஏன் கவலை படுற?” என்று அவன் கூறி முடிக்கவும், அவனிற்கு அடுத்து அவள் அருகிலே சில சம்ப்ரதாயங்கள் செய்து கொண்டு இருந்தனர்.
“எனக்கு எதிரி வேற எங்கேயும் இல்லை, என்னை பெத்த தெய்வங்களே போதும்” என்று சலித்து கொண்டாள்.
அதற்குள் அபிஜித்க்கு செய்ய வேண்டிய சடங்கு முறைய செய்துவிட்டு, அதன் பின் இருவருக்கும் சேர்ந்து ஆரத்தி சுற்றி எடுத்தனர். அதன் பின் இவளை அபிஜித்தின் உறவு பெண்கள் அழைத்து சென்று, அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் விட்டு சென்றனர்.
அவள் அடுத்து மாலை உடுத்த வேண்டிய திருமண நிச்சய புடவையை, அபிஜித்தின் அன்னை கொடுத்துவிட்டு சென்றார்.
“ஆண்டவா! நம்ம ஊர் பட்டு புடவையே தேவலை போல, இந்த புடவையை உடுத்திட்டு நிற்க முடியல. அவ்வளவு வெயிட், இதை சுமக்கவே நான் நிறைய சாப்பிடனும் போல” என்று நொந்து கொண்டு இருந்தாள்.
அறைக்குள் இவளின் அன்னை, அவளுக்கு அப்பொழுது மதிய உணவை கொடுக்க வந்தார். அவர் கையில் இருந்த தட்டையும், அதில் இருந்த வகையறாவையும் பார்த்து, பயந்து போனாள்.
“அம்மா! என்ன மா இது? நான் ஒருத்தி தான சாப்பிட போறேன், அதுக்கு ஏன் இவ்வளவு?” என்று அரண்டு போய் கேட்டாள்.
“எனக்கு என்ன டி தெரியும்? சம்மந்தி அம்மா தான் கொடுத்து விட்டாங்க, இதுவும் அவங்க இதுல ஒரு சம்ப்ரதாயம் போல டி”.
“சரி! சரி! கையை அசைக்காத, நல்லா மருதாணி காயட்டும்.நான் உனக்கு ஊட்டுறேன், முதல ஸ்வீட் சாப்பிடு” என்று கூறிவிட்டு அவளுக்கு ஒவ்வொன்றாக எடுத்து ஊட்ட தொடங்கினார்.
அவர் ஊட்ட ஊட்ட, இவள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள். சரியாக இவள் சாப்பிட்டு முடித்த பிறகு, அங்கே அபிஜித்தின் அத்தை பெண் ஒருத்தி வந்து அவளிடம், இன்னும் அரை மணி நேரம் கழித்து மெஹெந்தி கையையும், காலையும் கழுவி கொள்ளலாம் என்று கூறிவிட்டு சென்றாள்.
அவளுக்கு அதன் பிறகு தான் ஷப்பா என்று இருந்தது, இதுவரை இவ்வளவு நேரம் அவள் இப்படி கையை, காலை அசைக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்தது இல்லை, அதனால் வந்த பெருமூச்சு தான் இது.
“சரி டி, நான் போய் கீழே அடுத்து என்ன ஏற்பாடு செய்யணும் என்னனு பார்க்கிறேன். நீ அந்த பொண்ணு சொன்ன மாதிரி, அரை மணி நேரம் கழிச்சு கழுவிட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கு, நான் வந்து எழுப்புறேன்” என்று கூறிவிட்டு சென்றார்.
அவர் சென்ற பின், இவள் யோசனையில் ஆழ்ந்தாள். சிறிது நேரத்தில் கதவு மீண்டும் தட்டப்படவும், தன் தாயாக தான் இருக்கும் என்று எண்ணி உள்ளே வர கூறினாள்.
ஆனால் உள்ளே வந்ததோ அவள் அன்னை இல்லை, அவளை கரம் பிடிக்க போகும் மணாளன் அபிஜித். அவனை அப்பொழுது அந்த நேரத்தில் எதிர்பார்க்காததால், அவள் சற்று திடுகிட்டாள்.
“எதுக்கு இந்த ஷாக் பேபி? நான் தான் சொன்னேனே, உன் கிட்ட தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்னு பாக்கி இருக்கு, அதை வசூல் செய்ய வருவேன்னு, மறந்துட்டியா பேபி!” என்று அபிஜித் கூறவும் தான், அவளுக்கு அன்றைக்கு தான் செய்த முட்டாள்தனம் உரைத்தது.
“ஆண்டவா! எப்படி எல்லாம், நியாபகம் வச்சு கேட்குறான் இவன். இவன் இதை மறந்து இருப்பான் நினைச்சேன், கடவுளே நீங்க தான் காப்பாத்தனும் என்னை இப்போ” என்று மனதிற்குள் கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டு இருந்தாள், இதில் இருந்து தப்பிக்க.
“என்ன பேபி, இப்படி பயந்தாங்கோலியா இருக்க. நான் கூட உன்னை தைரியசாலின்னு நினைச்சேன், இப்படி பயப்புடுற!” என்று அவளை சீண்டினான்.
சீண்டியதோடு மட்டும் நிறுத்தாமல், அவளை நெருங்கி கொண்டு இருந்தான். அவளோ அவன் நெருங்கி வர வர, பின்னால் நகர்ந்து கொண்டு இருந்தாள்.
கையில் மருதாணியை வைத்துக் கொண்டு, அவனை தள்ளி விட கூட முடியாத சூழல். என்ன செய்யவென்று அவளுக்கு தெரியவில்லை, கண்களால் அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள், நகர்ந்து செல்லுமாறு.
அவனோ, அது புரிந்தும் புரியாதது போல் அவளை நெருங்கியது மட்டும் இல்லாமல், அவளின் இடையை பிடித்து தன்னருகே நிற்க வைத்தான். அவள் அணிந்து இருந்த, நார்த் இந்தியன் லேஹெங்கா புடவையில், அவன் கை அவளின் வெற்றிடையை பற்றி இருந்தது.
சொல்லொண்ணா உணர்வுகள், அவளை பிடித்து ஆட்டிக் கொண்டு இருந்தது. உதடுகள் துடிக்க, கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்தவளை பார்த்து, அவன் தன் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல், தன் முதல் முத்திரையை அவள் மூடிய இமைகளில் பதித்தான்.
அதில் அவள் மேனி சிலிர்த்து, நிற்க முடியாமல் தள்ளாடினாள். அதை உணர்ந்தவன், அவளை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்து அவள் விழாமல் பார்த்துக் கொண்டான்.
விது பேபி என்று அவள் காதில் ரகசியமாக முணுமுணுத்துவிட்டு, அவன் உதட்டை அவள் காதோடு உரசி விட்டு மேலும் துடிதுடிக்கும் அந்த இமைகளுக்கு மீண்டும் தன் முத்திரையை பதித்தான். அவளால் அதற்க்கு மேல் தாங்க முடியவில்லை, கையில் இருந்த மேஹெந்தியை மறந்து அவனை தன்னையறியாமல் கட்டிக் கொண்டாள்.
அதை அவன் தனக்கு அவள் அனுமதி வழங்கியதாக கருதி, அவனின் உதட்டை அவளின் உதட்டோடு சேர்த்து கவி எழுத நினைக்கையில் அவளின் அறை கதவு தட்டப்பட்டது.
அதில் சுய உணர்விற்கு வந்தவள், அவனை தன்னிடம் இருந்து பிரிக்க அவனை தள்ளி விட்டாள். திடிரென்று அவள் தள்ளி விடுவாள், என்று நினைக்காததால் அவன் தடுமாறி விழ போனான். அதற்குள் இவளே, அவனின் கை பிடித்து நிறுத்தி விட்டாள்.
“ஏய் செல்வி! என்ன டி இவ்வளவு நேரம், தூங்கிட்டியா?” என்று இவளின் அன்னை வெளியே இன்னும் பலமாக கதவை தட்டவும், அபிஜித் வேகமாக சென்று கதவை திறந்தான்.