• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏன் அழுதான்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

crvenkatesh

நாட்டாமை
Joined
Jan 26, 2019
Messages
52
Reaction score
172
Location
Chennai
ஏன் அழுதான்?

இலைகளினூடே சில்லறையாய்
இறைந்திருந்த வெய்யில்.
மரத்தின் நிழல்
மனதுக்கும் உடலுக்கும் இதம்.

காலையில் சாப்பிடாத வயிறு
கண்களைத் தாலாட்ட
வந்த கனவிலும் பசி.

ஏதோ ஒரு கை
(பார்த்தேயிராத அம்மாவுடையதோ?)
ஒரு கவளம் சோறு
ஊட்ட யத்தனித்தபோது
உதை விழுந்தது.

வலியில் துடித்து விழித்தன கண்கள்.

"மாட்டுக்குத் தண்ணி வக்காம
தூக்கம் என்னலே சவமே? த்தூ..."

மேலே வழிந்த எச்சிலில்
பன்னீர் புகையிலை வாசம்.

அழுக்குச் சட்டையால்
அவமானத்தைத் துடைத்துக் கொண்டு
மாட்டுக்குத் தண்ணி வைக்கையில்
அது சிரித்த மாதிரி இருந்தது.

திரும்ப யத்தனித்தக் கால்கள்
தனிமையை உணர்ந்து
தான் வாங்கிய உதையை
மாட்டுக்குத் தானம் செய்தது.

"சிரிப்பால சிரிச்ச?"

மாடு அழுதது.
எதற்கென்று தெரியாமல்
அவனும் அழுதான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top