மணநாளை எதிர்நோக்கிடும்
மங்கை...
விவாகம் செய்யப்போகும்
விழுமிய வித்தகனின்
விசாலமான இதயம் வஞ்சியிவள்
விரும்பி வசிக்கும்
வீட்டு விலாசமாகிவிடும்…
அஞ்சன இரவின்
அகாலப் பொழுதிலும்
அகவாளனின் அன்பை நினைத்து
அங்கனை அகம்
அக்களிப்பில் ஆர்ப்பரித்திடும்…
கரண்டி பிடிக்கும்
கன்னியின் கரங்கள்
கணவனின் காதலை நினைத்து
அகண்டி என்று
இசையினை மீட்டிடும்…
அக்கம்பக்க கதறல்களை
அம்போவென விட்டுவிட்டு
அன்பனின் கைப்பேசி அழைப்பை
அள்ளி அணைத்து
ஆதரவு தந்திடும்…
கல்யாணக் கனவுகளில்
கற்சிலையாக நின்றுகொண்டு
கட்டணமின்றி காதல் காட்சிகளை
கஞ்சம் இல்லாமல்
கலாய்ப்போரிடம் காட்டிடும்…
விருப்பத்தில்...
களிப்பில்...
காதலில்...
ஆனந்தத்தில்...
வெட்கத்தில்...
அச்சோ அச்சோ - இவள்
திருமணம்
நிச்சயம் ஆயாச்சோ!!!