வணக்கம் டியர்ஸ்,
அத்தியாயம் 3
“என்னடி? இன்னிக்கும் அந்த வேண்டாத வேலையைப் பார்க்கப் போகறியா?” எனச் சலிப்பாகக் கேட்டாள் மேகலா.
“எதுடி வேண்டாத வேலை? என் ஆளுக்கு காதல் சொல்றது வேண்டாத வேலையா? பிச்சுப் பிச்சு” என எகிறினாள் இவள்.
காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்துக் கிளம்பி, ஆறு மணிக்கு முதல் ஆளாய் ஹாஸ்டல் சமையலறைக்குப் போய் காபி வாங்கிக் குடித்து விட்டுத் தெம்பாய் கட்டிலில் அமர்ந்திருந்தவளை முறைத்தாள் மேகலா.
“நீயும்தான் பல மாசமா வரைஞ்சும் எழுதியும் தள்ளற!! அவன் உன்னைத் தேடி வரவே இல்லையே!!! எனக்கென்னமோ உன்னை அவன் ஒரு லூசுன்னு நெனைச்சி டீல்ல விட்டுட்டான்னு தோணுது”
தோழி சொன்னதைக் கேட்டதும் முகம் வாடிப் போனது இவளுக்கு.
“நானே போய் அவன் முன்ன நின்னு லவ் யூடா, லவ் யூ சோ மச்னு வெக்கத்த விட்டுச் சொல்லிடவா? என்னமோ ரொம்ப பிடிக்குதுடி அவன! படிக்கறப்போ, படுக்கறப்போ, தூங்கறப்போ, சாப்பிடறப்போன்னு எல்லா பொழுதுகளிலும் என் மண்டைக்குள்ளயும் மனசுக்குள்ளயும் நின்னு டார்ச்சர் பண்ணுறான்டி! தூரமா நின்னு கலாய்க்க தெரிஞ்ச எனக்கு, அவன கிட்டக்க பார்த்தா, வாயையே திறக்க முடியல! நடுங்கிடுது! அவனுக்கு காதல் சொன்ன பல பேர்ல நானும் பத்தோட பதினொன்னா ஆகிடக் கூடாதேன்ற பதட்டம் வேற! அவன் மனசுல ஆழமா இறங்கனும்னு இந்த கிறுக்குத்தனமெல்லாம் பண்ணறேன்! ஆனா நான் யாருன்னு தெரிஞ்சுக்கனும்னு ஆவலே இல்லாம இருக்கானேன்னு நெனைக்கறப்போ மனசு சுக்கு நூறா வெடிக்குதுடி!” என்றவள் மார்பை ஒரு கையால் அழுத்திக் கொண்டாள்.
மஞ்சள் வர்ண சுடிதாரில், முகம் மகிழ்ச்சியில் மின்ன தேவதைப் போல கிளம்பி நின்றவளைத் தன் பேச்சு களை இழக்க வைத்து விட்டதை எண்ணி வருத்தமாகிப் போனது மேகலாவுக்கு. கட்டிலில் இருந்து இறங்கி வந்து, வயிற்றோடு இவளைக் கட்டிக் கொண்டாள்.
“செல்லம்! இந்த வயசுல காதல்லாம் தேவையாடி உனக்கு? படிச்சு முடிச்சு நல்ல வேலைல சேர்ந்து உங்கப்பாவுக்கும் தாத்தாவுக்கும் பெருமைத் தேடி தர போறேன்னு சொன்னதெல்லாம் எருமை சாணியா போச்சா கோபால்?”
மேகலாவை திருப்பி இறுக்கிக் கொண்ட இவள்,
“மேகி! போன செமஸ்டர்ல நீ எத்தனை பாடத்துல அரியர் வச்ச?” எனக் கேட்டாள்.
“ரெண்டு”
“நானு?”
“எல்லாமே கிளியர் பண்ணிட்ட! அதுவும் நல்ல மார்க் எடுத்து”
“நீ யாரையாச்சும் லவ் பண்ணறியா?”
“இல்ல”
“பிறகு ஏன் அரியர்?”
“அது…”
“இப்போ புரியுதா லவ்வுக்கும், மார்க்குக்கும் சம்பந்தம் இல்லைன்னு! மாட்டு வண்டில ஒரு மாடு காதல்னா, இன்னொரு மாடு கல்வி! ரெண்டையும் சரி சமமா பிடிச்சு ஓட்டினாத்தான் வாழ்க்கைப் பாதை ஒழுங்கா ஓடும்! ஒன்ன விட்டுட்டு, இன்னொன்னுக்கு இம்பார்ட்டண்ட் குடுத்தா வண்டி குடை சாஞ்சிடும். அப்படி ரெண்டு மாட்டையும் சீரா தட்டிக் குடுத்து வண்டி ஓட்டத் தெரியாதவங்க, காதல் கத்திரிக்காய்னு ரிஸ்க் எடுக்கவே கூடாதுடி! என்னால ரெண்டையும் மேனேஜ் பண்ண முடியும்! நீ கவலைப்படாத!” என்றவள் தோழியை விலக்கி விட்டு பாடப் புத்தகத்தோடு அமர்ந்து விட்டாள்.
மேகலாவோ மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டு தோழியையே பார்த்திருந்தாள். மாநிறத்தில், கொளு கொளுவென கொள்ளை அழகாய் இருந்தாள் பெண். வில் புருவம், கவி பாடும் பெரிய கண்கள், உப்பிய கன்னம், குட்டி உதடுகள், கியூட்டான சின்ன மூக்கு, முதுகு வரை புரண்டிருந்த அடர்த்தியான கேசம் என தேவதையாய் தெரிந்தாள்.
“அழகுடி நீ!”
பாடப் புத்தகத்தில் மூழ்கி இருந்தவள் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
“அடியே!” என மேகலா சத்தமாய் அழைக்க, நிமிர்ந்து பார்த்தாள் பெண்.
“படிச்சா நினைவுல அவன் வரான், படுத்தா கனவுல அவன் வரான்னு பொலம்பிட்டு எப்படிடி நல்லா படிச்சு மார்க் எடுக்கற?” எனத் தன் சந்தேகத்தைக் கேட்டாள் மேகலா.
புன்னகையுடன் தோழியைப் பார்த்து,
“படிக்கறப்போ ஞாபகம் வந்தா, மைண்ட்ல பாடத்தைப் பத்தி அவன் கிட்ட பேசுவேன். படுக்கறப்போ ஞாபகம் வந்தா எனக்குப் பிடிச்ச பாடல்களைப் பத்தி அவன் கிட்ட பேசுவேன், சாப்பிடறப்போ ஞாபகம் வந்தா இன்னிக்கு சாம்பார் சாதம் கன்றாவியா இருந்ததுன்னு கம்ப்ளேண்ட் பண்ணுவேன்! மொத்தத்துல மொத்தமா என்னோட ஆக்டிவிட்டிஸ்ல அவனையும் இணைச்சுப்பேன்! அதான் என்னால சமாளிக்க முடியுது போல” என்றாள்.
“மொத்தத்துல முத்திடுச்சு!”
போனில் அலாரம் அடிக்க,
“மணி ஆறு நாப்பந்தைஞ்சு ஆச்சுடி! நான் போய் என் வேலைய முடிச்சுட்டு காண்டின்ல வேய்ட் பண்ணுறேன்! மறுபடி படுத்துத் தூங்கிடாம கிளம்பி வந்துடு மேகி! பாய்” எனப் புத்தகப் பையை எடுத்துக் கொண்டுக் கிளம்பினாள் பெண்.
சில்லென்ற காற்று அவள் மேனியைத் தழுவியது. சில்லிப்பை விரட்டி, சுளீரெனும் சூட்டைக் கிளப்ப தன்னாலான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருந்தார் சூரியனார்.
இவர்கள் ஹாஸ்டல் அருகே ஓர் ஆலமரம் இருக்கும். ஏற்கனவே அங்கே தங்கி இருந்த பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு விநாயகர் சிலையை வைத்திருந்தார்கள் அம்மரத்தின் கீழ். விநாயகருக்கு முன் போய் நின்று சூடம் ஒன்று ஏற்றி வைத்து கை கூப்பி,
“காதல் கவலைய
நீ தீர்த்து வச்சா கணேசா
கோவில் வாசல் வந்து
வெடிச்சிடுவேன் பட்டாசா
யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா”(பிள்ளையார்பட்டி ஹீரோ பாடல் வரி) எனப் பாடி அவரையே பேஜார் செய்து விட்டுக் கிளம்பினாள் இவள்.
காலேஜீனுள்ளே இவள் நுழைய, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தலைகள் மட்டுமே தெரிந்தன. அவசர அவசரமாக இவள் ஆளின் கிளாஸ் ரூமை நாடி நடந்தாள். இருட்டாய் இருந்தது
அத்தியாயம் 3
“என்னடி? இன்னிக்கும் அந்த வேண்டாத வேலையைப் பார்க்கப் போகறியா?” எனச் சலிப்பாகக் கேட்டாள் மேகலா.
“எதுடி வேண்டாத வேலை? என் ஆளுக்கு காதல் சொல்றது வேண்டாத வேலையா? பிச்சுப் பிச்சு” என எகிறினாள் இவள்.
காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்துக் கிளம்பி, ஆறு மணிக்கு முதல் ஆளாய் ஹாஸ்டல் சமையலறைக்குப் போய் காபி வாங்கிக் குடித்து விட்டுத் தெம்பாய் கட்டிலில் அமர்ந்திருந்தவளை முறைத்தாள் மேகலா.
“நீயும்தான் பல மாசமா வரைஞ்சும் எழுதியும் தள்ளற!! அவன் உன்னைத் தேடி வரவே இல்லையே!!! எனக்கென்னமோ உன்னை அவன் ஒரு லூசுன்னு நெனைச்சி டீல்ல விட்டுட்டான்னு தோணுது”
தோழி சொன்னதைக் கேட்டதும் முகம் வாடிப் போனது இவளுக்கு.
“நானே போய் அவன் முன்ன நின்னு லவ் யூடா, லவ் யூ சோ மச்னு வெக்கத்த விட்டுச் சொல்லிடவா? என்னமோ ரொம்ப பிடிக்குதுடி அவன! படிக்கறப்போ, படுக்கறப்போ, தூங்கறப்போ, சாப்பிடறப்போன்னு எல்லா பொழுதுகளிலும் என் மண்டைக்குள்ளயும் மனசுக்குள்ளயும் நின்னு டார்ச்சர் பண்ணுறான்டி! தூரமா நின்னு கலாய்க்க தெரிஞ்ச எனக்கு, அவன கிட்டக்க பார்த்தா, வாயையே திறக்க முடியல! நடுங்கிடுது! அவனுக்கு காதல் சொன்ன பல பேர்ல நானும் பத்தோட பதினொன்னா ஆகிடக் கூடாதேன்ற பதட்டம் வேற! அவன் மனசுல ஆழமா இறங்கனும்னு இந்த கிறுக்குத்தனமெல்லாம் பண்ணறேன்! ஆனா நான் யாருன்னு தெரிஞ்சுக்கனும்னு ஆவலே இல்லாம இருக்கானேன்னு நெனைக்கறப்போ மனசு சுக்கு நூறா வெடிக்குதுடி!” என்றவள் மார்பை ஒரு கையால் அழுத்திக் கொண்டாள்.
மஞ்சள் வர்ண சுடிதாரில், முகம் மகிழ்ச்சியில் மின்ன தேவதைப் போல கிளம்பி நின்றவளைத் தன் பேச்சு களை இழக்க வைத்து விட்டதை எண்ணி வருத்தமாகிப் போனது மேகலாவுக்கு. கட்டிலில் இருந்து இறங்கி வந்து, வயிற்றோடு இவளைக் கட்டிக் கொண்டாள்.
“செல்லம்! இந்த வயசுல காதல்லாம் தேவையாடி உனக்கு? படிச்சு முடிச்சு நல்ல வேலைல சேர்ந்து உங்கப்பாவுக்கும் தாத்தாவுக்கும் பெருமைத் தேடி தர போறேன்னு சொன்னதெல்லாம் எருமை சாணியா போச்சா கோபால்?”
மேகலாவை திருப்பி இறுக்கிக் கொண்ட இவள்,
“மேகி! போன செமஸ்டர்ல நீ எத்தனை பாடத்துல அரியர் வச்ச?” எனக் கேட்டாள்.
“ரெண்டு”
“நானு?”
“எல்லாமே கிளியர் பண்ணிட்ட! அதுவும் நல்ல மார்க் எடுத்து”
“நீ யாரையாச்சும் லவ் பண்ணறியா?”
“இல்ல”
“பிறகு ஏன் அரியர்?”
“அது…”
“இப்போ புரியுதா லவ்வுக்கும், மார்க்குக்கும் சம்பந்தம் இல்லைன்னு! மாட்டு வண்டில ஒரு மாடு காதல்னா, இன்னொரு மாடு கல்வி! ரெண்டையும் சரி சமமா பிடிச்சு ஓட்டினாத்தான் வாழ்க்கைப் பாதை ஒழுங்கா ஓடும்! ஒன்ன விட்டுட்டு, இன்னொன்னுக்கு இம்பார்ட்டண்ட் குடுத்தா வண்டி குடை சாஞ்சிடும். அப்படி ரெண்டு மாட்டையும் சீரா தட்டிக் குடுத்து வண்டி ஓட்டத் தெரியாதவங்க, காதல் கத்திரிக்காய்னு ரிஸ்க் எடுக்கவே கூடாதுடி! என்னால ரெண்டையும் மேனேஜ் பண்ண முடியும்! நீ கவலைப்படாத!” என்றவள் தோழியை விலக்கி விட்டு பாடப் புத்தகத்தோடு அமர்ந்து விட்டாள்.
மேகலாவோ மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டு தோழியையே பார்த்திருந்தாள். மாநிறத்தில், கொளு கொளுவென கொள்ளை அழகாய் இருந்தாள் பெண். வில் புருவம், கவி பாடும் பெரிய கண்கள், உப்பிய கன்னம், குட்டி உதடுகள், கியூட்டான சின்ன மூக்கு, முதுகு வரை புரண்டிருந்த அடர்த்தியான கேசம் என தேவதையாய் தெரிந்தாள்.
“அழகுடி நீ!”
பாடப் புத்தகத்தில் மூழ்கி இருந்தவள் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
“அடியே!” என மேகலா சத்தமாய் அழைக்க, நிமிர்ந்து பார்த்தாள் பெண்.
“படிச்சா நினைவுல அவன் வரான், படுத்தா கனவுல அவன் வரான்னு பொலம்பிட்டு எப்படிடி நல்லா படிச்சு மார்க் எடுக்கற?” எனத் தன் சந்தேகத்தைக் கேட்டாள் மேகலா.
புன்னகையுடன் தோழியைப் பார்த்து,
“படிக்கறப்போ ஞாபகம் வந்தா, மைண்ட்ல பாடத்தைப் பத்தி அவன் கிட்ட பேசுவேன். படுக்கறப்போ ஞாபகம் வந்தா எனக்குப் பிடிச்ச பாடல்களைப் பத்தி அவன் கிட்ட பேசுவேன், சாப்பிடறப்போ ஞாபகம் வந்தா இன்னிக்கு சாம்பார் சாதம் கன்றாவியா இருந்ததுன்னு கம்ப்ளேண்ட் பண்ணுவேன்! மொத்தத்துல மொத்தமா என்னோட ஆக்டிவிட்டிஸ்ல அவனையும் இணைச்சுப்பேன்! அதான் என்னால சமாளிக்க முடியுது போல” என்றாள்.
“மொத்தத்துல முத்திடுச்சு!”
போனில் அலாரம் அடிக்க,
“மணி ஆறு நாப்பந்தைஞ்சு ஆச்சுடி! நான் போய் என் வேலைய முடிச்சுட்டு காண்டின்ல வேய்ட் பண்ணுறேன்! மறுபடி படுத்துத் தூங்கிடாம கிளம்பி வந்துடு மேகி! பாய்” எனப் புத்தகப் பையை எடுத்துக் கொண்டுக் கிளம்பினாள் பெண்.
சில்லென்ற காற்று அவள் மேனியைத் தழுவியது. சில்லிப்பை விரட்டி, சுளீரெனும் சூட்டைக் கிளப்ப தன்னாலான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருந்தார் சூரியனார்.
இவர்கள் ஹாஸ்டல் அருகே ஓர் ஆலமரம் இருக்கும். ஏற்கனவே அங்கே தங்கி இருந்த பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு விநாயகர் சிலையை வைத்திருந்தார்கள் அம்மரத்தின் கீழ். விநாயகருக்கு முன் போய் நின்று சூடம் ஒன்று ஏற்றி வைத்து கை கூப்பி,
“காதல் கவலைய
நீ தீர்த்து வச்சா கணேசா
கோவில் வாசல் வந்து
வெடிச்சிடுவேன் பட்டாசா
யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா”(பிள்ளையார்பட்டி ஹீரோ பாடல் வரி) எனப் பாடி அவரையே பேஜார் செய்து விட்டுக் கிளம்பினாள் இவள்.
காலேஜீனுள்ளே இவள் நுழைய, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தலைகள் மட்டுமே தெரிந்தன. அவசர அவசரமாக இவள் ஆளின் கிளாஸ் ரூமை நாடி நடந்தாள். இருட்டாய் இருந்தது